முகப்பு
கிரிக்கெட்

ஒற்றை இலக்கத்தில் 8 வீரர்கள்..! ஸ்பென்சர் ஜான்சன் அசத்தலால் 109 ரன்களுக்கு சுருண்ட வங்கதேசம்!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் சொதப்பிய வங்கதேச அணியின் பேட்டிங் குறித்து..

Updated On : 21 ஜூன் 2026, 3:41 pm IST
விக்கெட் வீழ்த்திய மகிழ்ச்சியில் ஸ்பென்சர் ஜான்சன். - படம்: ஏபி
பகிர்:

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் வங்கதேச அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 109 ரன்கள் எடுத்துள்ளது.

டாஸ் வென்ற முதலில் பேட்டிங் செய்தவதாக முடிவெடுத்தது. ஆனால், 8 வங்கதேச வீரர்கள் ஒற்றை இலக்க ரன்கள் எடுத்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

வங்கதேச அணியில் அதிகபட்சமாக டவ்ஹித் ஹிருதாய் 61 ரன்கள் எடுத்தார். ரிஷாத் ஹைசைன் 16 ரன்கள் எடுக்க, மற்ற யாவருமே இரட்டை இலக்க ரன்கள் எடுக்க தவறினார்கள்.

Advertisement

Advertisement

ஆஸ்திரேலியா சார்பில் சிறப்பாக பந்துவீசிய ஸ்பென்சர் ஜான்சன் 4 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை வீழ்த்தி 6 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார். இவருடன் நாதன் எல்லீஸ், ஆடம் ஸாம்பா தலா 2 விக்கெட்டுகளை எடுத்தார்கள்.

ஒருநாள் தொடரை 1-2 என இழந்த ஆஸ்திரேலியா டி20 தொடரில் 2-0 என கைப்பற்றியுள்ளது. இதிலும் வென்று, 3-0 என ஒயிட்வாஷ் செய்யும் அளவுக்கு சிறப்பாக பந்துவீசியுள்ளது.

summary

3rd T20I against Australia, bangladesh score 109 runs in 20 overs

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.