மகளிர் டி20 உலகக் கோப்பை: வங்கதேசத்தை 77 ரன்களுக்குக் கட்டுப்படுத்திய ஆஸி.!
மகளிர் டி20 உலகக் கோப்பையில் அசத்திய ஆஸ்திரேலிய அணி குறித்து...
ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பையின் 9-ஆவது போட்டியில் ஆஸ்திரேலிய மகளிரணி டாச் வென்று பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.
வங்கதேச மகளிரணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 77 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்த அணியில் அதிகபட்சமாக நிகார் சுல்தானா 27 ரன்கள் எடுத்தார்.
ஆஸ்திரேலியா சார்பில் பந்துவீசிய கிம் கார்த், சோஃபி மோலினக்ஸ், எல்லீஸ் பெர்ரி தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள்.
Advertisement
Advertisement
வங்கதேசம் சார்பில் 8 வீராங்கனைகள் ஒற்றை இலக்க ரன்கள் மட்டுமே எடுத்து அதிர்ச்சி அளித்தார்கள். 78 என்ற எளிய இலக்குடன் தனது பேட்டிங்கை செய்துவரும் ஆஸ்திரேலியா 5 ஓவர்களில் 1 விக்கெட்டை இழந்து 35 ரன்கள் எடுத்துள்ளது.
பெத் மூனி 10 ரன்களுக்கு ஆட்டமிழக்க, ஜியார்ஜியோ வோல் அதிரடியாக விளையாடி வருகிறார். எல்லீஷ் பெர்ரி நிதானமாக விளையாடி வருகிறார்.
இந்தப் போட்டியில் வென்றால் ஆஸி. அணி குரூப் ஏ பிரிவில் முதலிடத்தை தக்கவைத்துக்கொள்ளும். வங்கதேச அணிக்கு இந்தத் தோல்வி பின்னடைவச் சந்திக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.