முகப்பு
கிரிக்கெட்

3.2 ஓவரில் அரைசதம்: 300 ரன்கள் அடிக்குமா சன்ரைசர்ஸ்?

அதிரடியாக பேட்டிங் செய்துவரும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி குறித்து...

டிராவிஸ் ஹெட். - படம்: ஏபி
பகிர்:

அதிரடியாக பேட்டிங் செய்துவரும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 3.2 ஓவரில் 50 ரன்களைக் கடந்துள்ளது.

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது. இந்தப் போட்டியில் வெல்லும் அணி முதலிடத்தைப் பிடிக்கும் என்பதால் மிகுந்த சுவாரசியம் ஏற்பட்டுள்ளது.

நடப்பு ஐபிஎல் சீசனில் பஞ்சாப் கிங்ஸ் அணி 13 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருக்கிறது. ஆர்சிபி அணி 12 புள்ளிகளுடன் இரண்டாமிடத்திலும் சன்ரைசர்ஸ் 12 புள்ளிகளுடன் மூன்றாமிடத்தில் இருக்கிறது.

Advertisement

Advertisement

ஐபிஎல் வரலாற்றில் அதிக ரன்கள் (287/3) குவித்த அணியாக இருக்கும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் இந்தப் போட்டியில் 300 ரன்களை குவிக்குமா என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

அதிரடியாக விளையாடி வந்த அபிஷேக் சர்மா 13 பந்துகளில் 35 ரன்களில் ஆட்டமிழந்தார். டிராவிஸ் ஹெட் 18 ரன்களுடன் இஷான் கிஷன் உடன் விளையாடி வருகிறார்.

summary

Fifty in 3.2 Overs: Will Sunrisers Score 300 Runs?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments