3.2 ஓவரில் அரைசதம்: 300 ரன்கள் அடிக்குமா சன்ரைசர்ஸ்?
அதிரடியாக பேட்டிங் செய்துவரும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி குறித்து...
அதிரடியாக பேட்டிங் செய்துவரும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 3.2 ஓவரில் 50 ரன்களைக் கடந்துள்ளது.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது. இந்தப் போட்டியில் வெல்லும் அணி முதலிடத்தைப் பிடிக்கும் என்பதால் மிகுந்த சுவாரசியம் ஏற்பட்டுள்ளது.
நடப்பு ஐபிஎல் சீசனில் பஞ்சாப் கிங்ஸ் அணி 13 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருக்கிறது. ஆர்சிபி அணி 12 புள்ளிகளுடன் இரண்டாமிடத்திலும் சன்ரைசர்ஸ் 12 புள்ளிகளுடன் மூன்றாமிடத்தில் இருக்கிறது.
Advertisement
ஐபிஎல் வரலாற்றில் அதிக ரன்கள் (287/3) குவித்த அணியாக இருக்கும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் இந்தப் போட்டியில் 300 ரன்களை குவிக்குமா என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
அதிரடியாக விளையாடி வந்த அபிஷேக் சர்மா 13 பந்துகளில் 35 ரன்களில் ஆட்டமிழந்தார். டிராவிஸ் ஹெட் 18 ரன்களுடன் இஷான் கிஷன் உடன் விளையாடி வருகிறார்.