பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடர்; முக்கிய ஆஸி. வீரர்கள் விளையாடுவதில் சிக்கல்!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான அட்டவணையை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ளது.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான அட்டவணையை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ளது.
ஆஸ்திரேலிய அணி பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான இந்த ஒருநாள் தொடர் வருகிற மே 30 ஆம் தேதி தொடங்குகிறது. ஜூன் 2 ஆம் தேதி இரண்டாவது ஒருநாள் போட்டியும், ஜூன் 4 ஆம் தேதி மூன்றாவது ஒருநாள் போட்டியும் நடைபெறவுள்ளது.
ஆஸ்திரேலிய வீரர்கள் பலரும் ஐபிஎல் தொடரில் விளையாடி வருவதால், பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாட முடியாத சூழல் அவர்களுக்கு உருவாக வாய்ப்பிருக்கிறது. ஐபிஎல் தொடரின் பிளே ஆஃப் போட்டிகள் மே 26 ஆம் தேதி தொடங்கி மே 31 வரை நடைபெறுகிறது. ஐபிஎல் தொடரில் நன்றாக விளையாடி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் நிலையில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் உள்ளன.
Advertisement
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் கேப்டன் பாட் கம்மின்ஸ், டிராவிஸ் ஹெட், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் ஜோஷ் ஹேசில்வுட், பஞ்சாப் கிங்ஸ் அணியில் கூப்பர் கானலி, சேவியர் பார்ட்லெட் போன்ற ஆஸ்திரேலிய வீரர்கள் உள்ளனர். இந்த மூன்று அணிகளும் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் நிலையில் உள்ளதால், அந்த அணியில் உள்ள ஆஸ்திரேலிய வீரர்கள் அனைவரும் பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடுவதற்கு வாய்ப்பில்லை எனக் கூறப்படுகிறது.
தில்லி கேபிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கும் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பு இருப்பதால், அந்த அணியில் உள்ள மிட்செல் ஸ்டார்க் மற்றும் கேமரூன் கிரீனும் பாகிஸ்தானுக்கு எதிரான தொடரில் விளையாடுவது சந்தேகம் எனக் கூறப்படுகிறது.
லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி கிட்டத்தட்ட பிளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பை இழந்துவிட்டதால், அந்த அணியில் உள்ள ஆஸ்திரேலிய வீரர்களான மிட்செல் மார்ஷ் மற்றும் ஜோஷ் இங்லிஷ் இருவரும் பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடுவார்கள் எனக் கூறப்படுகிறது.