ஐபிஎல் தொடரில் பேட்டர்களின் சவாலை சமாளிப்பது எப்படி என்பது குறித்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் ஆல்ரவுண்டர் க்ருணால் பாண்டியா பேசியுள்ளார்.
ஐபிஎல் தொடரின் 19-வது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஐபிஎல் தொடரில் லக்னௌவில் இன்று (மே 7) நடைபெறும் 50-வது போட்டியில் லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் விளையாடுகின்றன.
இந்த நிலையில், ஐபிஎல் தொடரில் பேட்டர்களின் சவாலை சமாளிப்பது எப்படி என்பது குறித்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் ஆல்ரவுண்டர் க்ருணால் பாண்டியா பேசியுள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: ஐபிஎல் தொடரை உற்றுக் கவனித்திருந்தால் கடந்த 10 ஆண்டுகளில் பேட்டர்கள் பந்தை அடித்து விளையாடும் விதம் பெரிய அளவில் மாறியிருப்பதை கவனித்திருக்கலாம். பேட்டர்கள் அதிரடியாக விளையாடும் விதம் அதிகரித்துள்ளது. ஐபிஎல் தொடரில் புதிதாக அறிமுகமாகும் வீரர்கள் மிகவும் எளிதாக பவுண்டரிகள் மற்றும் சிக்ஸர்கள் விளாசுகிறார்கள். அதனால், பந்துவீச்சாளர்கள் அவர்களது பந்துவீச்சில் நிறைய வித்தியாசமான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டியிருக்கிறது.
பேட்டர்களைக் காட்டிலும் பந்துவீச்சாளர்கள் ஒருபடி அதிகமாக சிந்திக்க வேண்டிய இடத்தில் இருக்கிறார்கள். அதன் காரணமாகவே, என்னுடைய பந்துவீச்சில் பௌன்சர்கள் மற்றும் யார்க்கர்களை உங்களால் பார்க்க முடிகிறது. என்னுடைய பந்துவீச்சில் ஒரே நாளில் திடீரென மாற்றங்களை கொண்டு வந்துவிடவில்லை என்றார்.
Summary
Royal Challengers Bangalore all-rounder Krunal Pandya has spoken about how to tackle the challenge posed by batters in the IPL.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஐபிஎல் வரலாற்றில் மாபெரும் சாதனை; விராட் கோலிக்கு க்ருணால் பாண்டியா புகழாரம்!

ஆடுகளத்தில் குறையல்ல; பந்துவீச்சில் அசத்திய ஆர்சிபி: க்ருணால் பாண்டியா

சிஎஸ்கே ரசிகர் ராஜ்பிரியன் விடியோவை பகிர்ந்த க்ருணால் பாண்டியா!

சாதனைப் பட்டியலில் இடம்பிடித்த ஆல்ரவுண்டர் க்ருணால் பாண்டியா!
வீடியோக்கள்

சட்டப்படி ஆளுநர் அழைக்க வேண்டும்! தவெக நிர்மல் குமார் பேட்டி | TVK | DMK
தினமணி செய்திச் சேவை

தவெகவுக்கு ஆதரவா? ஸ்டாலின் என்ன சொன்னார்?: Mu. Veerapandian Exclusive | CPI | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

ஆர். பி. செளத்ரிக்கு அஞ்சலி செலுத்தியபின் Rajinikanth பேட்டி!
இணையதளச் செய்திப் பிரிவு

29 பட டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு



