விராட் கோலியின் விக்கெட்டினை வீழ்த்தியதில் மகிழ்ச்சி, ஆனால்... பிரின்ஸ் யாதவ் கூறியதென்ன?
விராட் கோலியின் விக்கெட்டினை வீழ்த்திய பிறகு மிகவும் நன்றாக உணர்ந்ததாக லக்னௌ அணியின் வேகப் பந்துவீச்சாளர் பிரின்ஸ் யாதவ் தெரிவித்துள்ளார்.
விராட் கோலியின் விக்கெட்டினை வீழ்த்திய பிறகு மிகவும் நன்றாக உணர்ந்ததாக லக்னௌ அணியின் வேகப் பந்துவீச்சாளர் பிரின்ஸ் யாதவ் தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் தொடரில் லக்னௌவில் நேற்று (மே 7) நடைபெற்ற ஆட்டத்தில் லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் விளையாடின. இந்தப் போட்டியில் லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் 9 ரன்கள் வித்தியாசத்தில் ஆர்சிபியை வீழ்த்தியது.
இந்தப் போட்டியில் லக்னௌ தரப்பில் அபார பந்துவீச்சை வெளிப்படுத்திய பிரின்ஸ் யாதவ் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். அவர் விராட் கோலி, தேவ்தத் படிக்கல் மற்றும் ஜித்தேஷ் சர்மாவின் விக்கெட்டுகளை வீழ்த்தினார். விராட் கோலியை 0 ரன்னில் ஆட்டமிழக்கச் செய்து அசத்தினார் பிரின்ஸ் யாதவ்.
Advertisement
இந்த நிலையில், விராட் கோலியின் விக்கெட்டினை வீழ்த்திய பிறகு மிகவும் நன்றாக உணர்ந்ததாகவும், அதைவிட அணியின் வெற்றி மிகவும் மகிழ்ச்சியளித்ததாகவும் பிரின்ஸ் யாதவ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: விராட் கோலியின் விக்கெட்டினை வீழ்த்திய பிறகு மிகவும் மகிழ்ச்சியாக உணர்ந்தேன். ஆனால், அணி வெற்றி பெற்றது அதைவிட எனக்கு மிகுந்த மகிழ்ச்சியளித்தது. நான் விக்கெட் எடுத்து அணி தோற்றிருந்தால் நான் மகிழ்ச்சியாக இருந்திருக்க மாட்டேன் என்றார்.
நடப்பு ஐபிஎல் தொடரில் இதுவரை 10 போட்டிகளில் விளையாடியுள்ள பிரின்ஸ் யாதவ் 16 விக்கெட்டுகளுடன், அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர்கள் வரிசையில் மூன்றாவது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.