ஆப்கனுக்கு எதிரான டெஸ்ட்: நெட் பந்துவீச்சாளர்களாக இணைந்த ஆகிப் நபி, பிரின்ஸ் யாதவ்!
ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டிக்காக இந்திய அணியில் நெட் பந்துவீச்சாளர்களாக ஆகிப் நபி மற்றும் பிரின்ஸ் யாதவ் இணைந்துள்ளனர்.
ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டிக்காக இந்திய அணியில் நெட் பந்துவீச்சாளர்களாக ஆகிப் நபி மற்றும் பிரின்ஸ் யாதவ் இணைந்துள்ளனர்.
ஆப்கானிஸ்தான் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒரு டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான டெஸ்ட் போட்டி வருகிற ஜூன் 6 ஆம் தேதி முதல் தொடங்குகிறது.
இந்த நிலையில், ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டிக்குத் தயாராவதற்காக இந்திய அணியில் நெட் பந்துவீச்சாளர்களாக ஆகிப் நபி மற்றும் பிரின்ஸ் யாதவ் இணைந்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.
Advertisement
Advertisement
இவர்கள் இருவரையும் தவிர்த்து, குர்ஜப்நீத் சிங், ஷிவாங் குமார், சாரன்ஷ் ஜெயின் மற்றும் ஸீசன் அன்சாரி ஆகியோரும் நெட் பந்துவீச்சாளர்களாக இணைந்துள்ளனர்.
நடப்பு ஐபிஎல் தொடரில் லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்காக சிறப்பாக விளையாடிய பிரின்ஸ் யாதவ், ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் பிரின்ஸ் யாதவ் இடம்பெற்றுள்ளார். லக்னௌ அணிக்காக அபார பந்துவீச்சை வெளிப்படுத்திய பிரின்ஸ் யாதவ், 16 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா மற்றும் குர்னூர் பிரார் இடம்பெற்றுள்ளதால், மற்ற வீரர்களை அணியில் இடம்பெற வைக்க முடியவில்லை என அணித் தேர்வுக்குழுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவுக்கு எதிராக கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் முறையாக டெஸ்ட் போட்டியில் விளையாடிய ஆப்கானிஸ்தான் அணி, தற்போது இரண்டாவது முறையாக இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் விளையாடவுள்ளது குறிப்பிடத்தக்கது.