60 விக்கெட்டுகள் வீழ்த்தியவருக்கு அணியில் இடமில்லையா? ஆகிப் நபிக்கு பயிற்சியாளர் ஆதரவு!
ரஞ்சி கோப்பையில் 60 விக்கெட்டுகள் வீழ்த்திய ஜம்மு - காஷ்மீர் வேகப் பந்துவீச்சாளர் ஆகிப் நபிக்கு ஆதவராக இஷாந்த் சர்மாவின் பயிற்சியாளர் கேள்வி எழுப்பியுள்ளார்.
ரஞ்சி கோப்பையில் 60 விக்கெட்டுகள் வீழ்த்திய ஜம்மு - காஷ்மீர் வேகப் பந்துவீச்சாளர் ஆகிப் நபிக்கு ஆதவராக இஷாந்த் சர்மாவின் பயிற்சியாளர் ஷ்ரவன் குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்திய அணி ஆப்கானிஸ்தானுக்கு எதிராக டெஸ்ட் போட்டியில் விளையாடவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான இந்தப் போட்டி வருகிற ஜூன் 6 ஆம் தேதி நியூ சண்டீகரில் தொடங்குகிறது.
இந்த நிலையில், ரஞ்சி கோப்பையில் அபார பந்துவீச்சை வெளிப்படுத்திய வேகப் பந்துவீச்சாளர் ஆகிப் நபியை அணியில் சேர்க்காமல், மாற்று வீரருக்கான தெரிவில் வைத்துள்ளது குறித்து இஷாந்த் சர்மாவின் பயிற்சியாளர் ஷ்ரவன் குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.
Advertisement
Advertisement
இது தொடர்பாக அவர் பேசியதாவது: ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரில் 60 விக்கெட்டுகளை வீழ்த்திய ஆகிப் நபியை, ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அணியில் ஒரு வீரராக சேர்க்காமல் மாற்று வீரருக்கான தெரிவாகவும், நெட் பந்துவீச்சாளராகவும் வைத்துள்ளது ஏன்? மாற்று வீரர் என்ற பெயரில் அவரை நெட் பந்துவீச்சாளராக சேர்த்துள்ளீர்கள். அவர் அணியில் இடம்பெற்றிருக்க வேண்டும். அவரை நெட் பந்துவீச்சாளராக கருத்தில் எடுத்துக் கொண்டிருக்கக் கூடாது. இதனைப் பார்ப்பதற்கு மிகவும் குழப்பமாக இருக்கிறது.
ஆகிப் நபி போன்ற பந்துவீச்சாளர்களின் கடின உழைப்புக்கு அங்கீகாரம் கிடைக்காதது ஏன்? ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டிக்கான அணியில் அவர் இடம்பெற்றிருக்க வேண்டும். ஒரு டெஸ்ட் போட்டியில் மட்டும் விளையாடும்போது அவர் ஏன் மாற்று வீரராக சேர்க்கப்பட வேண்டும். ரஞ்சி கோப்பைத் தொடரில் 60 விக்கெட்டுகளை ஆகிப் நபி கைப்பற்றியுள்ளார். அவரை அணியில் சேர்க்காமல் மற்ற வீரர்களை அணியில் சேர்ப்பதை எப்படி நியாயப்படுத்த முடியும். ஆகிப் நபி வாய்ப்புக்காக கெஞ்சவில்லை. அபார பந்துவீச்சின் மூலம் அவரது திறமையை வெளிக்காட்டியுள்ளார். 60 விக்கெட்டுகள் கைப்பற்றுவது என்பது நகைச்சுவை கிடையாது என்றார்.