ஓவர்கள் குறைக்கப்படாது: ஆர்சிபி பந்துவீச்சு; அணியில் வெங்கடேஷ் ஐயர் சேர்ப்பு!
சத்தீஸ்கரில் நடைபெறும் ஆர்சிபி - கேகேஆர் ஐபிஎல் போட்டி குறித்து...
சத்தீஸ்கரில் நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டாஸ் வென்ற அணி பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது. ஆர்சிபி அணியில் வெங்கடேஷ் ஐயர் சேர்க்கப்பட்டுள்ளார்.
ஐபிஎல் தொடரின் 57-ஆவது போட்டியில் ஆர்சிபியும் கொல்கத்தா அணியும் மோதுகின்றன. மழையினால் ஏற்பட்ட ஈரப்பதம் காரணமாக 7 மணிக்கு டாஸ் சுண்டுவது 8.30 மணியாக மாறியது.
இந்தப் போட்டி 8.45 மணிக்கு தொடங்கும். இருந்தும் இரு அணிகளும் முழுமையாக 20 ஓவர்கள் விளையாடுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement
ஆர்சிபி அணி புள்ளிப் பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருக்கிறது. இந்தப் போட்டியில் வென்றால் முதலிடத்துக்கு முன்னேறும் வாய்ப்பிருக்கிறது.
இந்தப் போட்டியில் கேகேஆர் வென்றால் தில்லியை பின்னுக்குதள்ளி 7ஆவது இடத்துக்கு முன்னேறும் என்பது குறிப்பிடத்தக்கது.