ரூ.18 கோடிக்கு 8 பந்துகள் மட்டுமே வீசி மீண்டும் காயத்தால் வெளியேறிய பதிரானா..! அதிர்ச்சியில் கேகேஆர் நிர்வாகம்!
கேகேஆர் அணியின் பந்துவீச்சாளர் மதீஷா பதிரானா குறித்து...
ஐபிஎல் மினி ஏலத்தில் ரூ.18 கோடிக்கு வாங்கப்பட்ட வேகப் பந்துவீச்சாளர் மதீஷா பதிரானா வெறுமனே 8 பந்துகள் மட்டுமே வீசி மீண்டும் காயத்தில் போட்டியிலிருந்து வெளியேறினார்.
நேற்றிரவு நடைபெற்ற போட்டியில் முதலில் பேட்டிங் செய்த கேகேஆர் அணி 247/2 ரன்கள் குவித்தது. அடுத்து விளையாடிய குஜராத் அணி 218/4 ரன்கள் எடுத்து தோல்வியுற்றது.
இந்தப் போட்டியில் மதீஷா பதிரானா களமிறங்கினார். 8 பந்துகள் வீசிய நிலையில் தசைப்பிடிப்பு காரணமாக போட்டியிலிருந்து விலகினார்.
Advertisement
ஏற்கெனவே, பதிரானா காயம் காரணமாக பாதிக்கும் அதிகமான ஐபிஎல் போட்டிகளில் விளையாடாமல் இருந்தார். தற்போது, இந்த சீசனில் முதல் போட்டியிலும் 8 பந்துகளில் காயத்தால் வெளியேறினார்.
சிஎஸ்கே அணியிலும் இதே மாதிரி காயத்தினால் சொதப்பி வந்த பதிரான கொல்கத்தா அணியிலும் செய்வது அவரை ரூ.18 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது தவறான முடிவாகிவிட்டதாக வருந்தி வருவதாக அவர்களது ரசிகர்களே சமூக வலைதளத்தில் புலம்பி வருகிறார்கள்.
கொல்கத்தா அணி 11 புள்ளிகள் பெற்றுள்ளன. மீதமுள்ள 2 போட்டிகளில் வென்றால் 15 புள்ளிகள் பெற்று பிளே ஆஃப் செல்லவும் வாய்ப்பிருக்கிறது.