பிளே ஆஃப் சுற்றுக்கான போட்டியில் நீடிக்குமா சிஎஸ்கே? ஹைதராபாதுக்கு 181 ரன்கள் இலக்கு!
சென்னை சூப்பர் கிங்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் இடையே நடைபெற்று வரும் போட்டி குறித்து...
பிளே ஆஃப் சுற்றுக்கான போட்டியில் நீடிக்கும் போராட்டத்தில் ஹைதராபாத் அணிக்கு 181 ரன்களை இலக்காக சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்ணயித்தது.
நடப்பு ஐபிஎல் தொடரின் 63 ஆவது போட்டி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் விளையாட்டுத் திடலில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் விளையாடி வருகின்றன.
சென்னை அணி பிளே ஆஃப் வாய்ப்பை எட்டுவதற்கு மிகமுக்கியமானதாக பார்க்கப்படும் இந்தப்போட்டியில் டாஸ் வென்ற சிஎஸ்கே பேட்டிங்கைத் தேர்வு செய்தது.
Advertisement
Advertisement
இதனையடுத்து, முதலில் களமிறங்கிய சிஎஸ்கே அணியில் அதிகபட்சமாக டெவால்ட் பிரேவிஸ் 44 ரன்களும், கார்த்திக் சர்மா 32 ரன்களையும் எடுத்தனர்.
ஹைதராபாத் அணியில் சிறப்பாக பந்து வீசிய அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் 3 விக்கெட்டுகளையும், சகிப் ஹுசைன் 2 விக்கெட்டுகளையும் , இஷான் மல்லிங்கா மற்றும் பிரஃபுல் ஹிங்கே தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.
In the ongoing battle for a spot in the playoffs, CSK set a target of 181 runs for the Hyderabad team.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.