முகப்பு
கிரிக்கெட்

பிளே ஆஃப் சுற்றுக்கான போட்டியில் நீடிக்குமா சிஎஸ்கே? ஹைதராபாதுக்கு 181 ரன்கள் இலக்கு!

சென்னை சூப்பர் கிங்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் இடையே நடைபெற்று வரும் போட்டி குறித்து...

சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் ரன் எடுக்க பாயும்போது. - படம் -பிடிஐ
பகிர்:

பிளே ஆஃப் சுற்றுக்கான போட்டியில் நீடிக்கும் போராட்டத்தில் ஹைதராபாத் அணிக்கு 181 ரன்களை இலக்காக சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்ணயித்தது.

நடப்பு ஐபிஎல் தொடரின் 63 ஆவது போட்டி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் விளையாட்டுத் திடலில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் விளையாடி வருகின்றன.

சென்னை அணி பிளே ஆஃப் வாய்ப்பை எட்டுவதற்கு மிகமுக்கியமானதாக பார்க்கப்படும் இந்தப்போட்டியில் டாஸ் வென்ற சிஎஸ்கே பேட்டிங்கைத் தேர்வு செய்தது.

Advertisement

இதனையடுத்து, முதலில் களமிறங்கிய சிஎஸ்கே அணியில் அதிகபட்சமாக டெவால்ட் பிரேவிஸ் 44 ரன்களும், கார்த்திக் சர்மா 32 ரன்களையும் எடுத்தனர்.

ஹைதராபாத் அணியில் சிறப்பாக பந்து வீசிய அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் 3 விக்கெட்டுகளையும், சகிப் ஹுசைன் 2 விக்கெட்டுகளையும் , இஷான் மல்லிங்கா மற்றும் பிரஃபுல் ஹிங்கே தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

summary

In the ongoing battle for a spot in the playoffs, CSK set a target of 181 runs for the Hyderabad team.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.