சன்ரைசர்ஸ் ஹைதராபாத் வெளியேற்றம்: மகிழ்ச்சியில் சிஎஸ்கே ரசிகர்கள்!
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் வெளியேற்றமும் சிஎஸ்கே ரசிகர்கள் மகிழ்ச்சிக்குமான காரணங்கள் குறித்து...
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி எலிமினேட்டர் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிடம் தோல்வியுற்று வெளியேறியதால் சிஎஸ்கே ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.
நேற்றிரவு நடந்த எலிமினேட்டர் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் 20 ஓவர்களில் 243/8 ரன்கள் எடுக்க, அடுத்து விளையாடிய சன்ரைசர்ஸ் 19.2 ஓவர்களில் 192 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
இந்தப் போட்டியில் தோல்வியுற்றதால் சன்ரைசர்ஸ் அணி ஐபிஎல் தொடரிலிருந்து வெளியேறியது. சமூக வலைதளத்தில் சிஎஸ்கே ரசிகர்கள் இஷான் கிஷனையும் அந்த அணியையும் டேக் செய்து பதிவிட்டு வருகிறார்கள்.
Advertisement
Advertisement
இந்தளவுக்கு சிஎஸ்கே ரசிகர்கள் கொண்டாட காரணம் கடைசியாக சேப்பாக்கில் நடந்த போட்டியில் சன்ரைசர்ஸ் அணி வென்றது. அந்தப் போட்டியில் இஷான் கிஷன் சிஎஸ்கே ரசிகர்களைப் பார்த்து, “வீட்டிற்குச் செல்லுங்கள்” என விசில் அடித்து கேலி செய்தார்.
இந்தக் காரணத்தினால், தற்போது சன்ரைசர்ஸ் அணி தோல்வியுற்றதும் இஷான் கிஷனை சிஎஸ்கே ரசிகர்கள் “வீட்டிற்குச் செல்லுங்கள்” என்றும் ”கர்மா சும்மா விடாது” என்று விசில் அடித்து கேலி செய்து வருகிறார்கள்.
மாறாக, சூர்யவன்ஷி தோனியிடம் ஆசிர்வாதம் பெற்றதையும் ஒப்பிட்டு கிரிக்கெட் வீரர்களுக்குப் பணிவு வேண்டும் எனவும் கூறி வருகிறார்கள்.