லுங்கி இங்கிடி நலமுடன் உள்ளார்: ஐபிஎல் நிர்வாகம் தகவல்
பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தின் போது காயமடைந்த டெல்லி வீரர் லுங்கி இங்கிடி நலமுடன் இருப்பதாக ஐபிஎல் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தின் போது காயமடைந்த டெல்லி வீரர் லுங்கி இங்கிடி நலமுடன் இருப்பதாக ஐபிஎல் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ஐபிஎல் நிர்வாகம் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், "பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தின் போது கேட்ச் பிடிக்க முயன்ற டெல்லி கேபிடல்ஸ் வீரர் லுங்கி இங்கிடியின் தலை தரையில் மோதியது. அவருக்கு தலைவலி மற்றும் கழுத்து வலி இருந்ததால், அவர் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.
இங்கிடி தற்போது சீராக உள்ளார், விரைவில் மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட உள்ளார். இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. ஐபிஎல் தொடரின் 35ஆவது லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலப்பரிட்சை நடத்தின. டாஸ் வென்ற தில்லி கேபிடல்ஸ் அணி முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தது.
Advertisement
அதிரடியாக ஆடிய அந்த அணி 20 ஓவர்களில் 2 விக்கெட்டுகள் மட்டும் இழந்து 264 ரன்கள் குவித்தது. இந்த நிலையில் பஞ்சாப்பிற்கு எதிரான ஆட்டத்தின்போது பிரியன்ஷ் ஆர்யா அடித்த பந்தை கேட்ச் பிடிக்க முயன்ற லுங்கி இங்கிடிக்கு தலையில் அடிபட்டது. பவுண்டரி எல்லை அருகே வந்த கேட்ச்சைப் பிடிக்க பின்னோக்கி ஓடியபோது அவர் நிலை தடுமாறி கீழே விழுந்தார்.
இதில் தரையில் அவரது தலை பலமாக மோதியது. இதனால் மைதானத்திலேயே வலியால் அவர் துடித்தார். சம்பவம் நடந்த உடனே டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் மருத்துவக் குழுவினர் மைதானத்திற்குள் விரைந்து வந்து முதலுதவி சிகிச்சை அளித்தனர். ஆட்டமும் சில நிமிடங்கள் நிறுத்தப்பட்டது.
பின்னர் மைதானத்திற்குள் ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு அவரை ஸ்டெச்சர் மூலமாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
Delhi Capitals pacer Lungi Ngidi is "stable" and will be "discharged shortly" from a local hospital where he underwent medical examination after he hurt himself during his side's IPL match against Punjab Kings here on Saturday.