கடந்த 2018 பிப்ரவரி மாதம் தென்னாப்பிரிக்க டெஸ்ட் தொடரில் பந்தை உப்பு காகிதம் கொண்டு சேதப்படுத்தியதாக எழுந்த புகாரின் பேரில் கேப்டன் ஸ்மித், துணை கேப்டன் டேவிட் வார்னருக்கு கிரிக்கெட் ஆட ஓராண்டும், பேட்ஸ்மேன் பேன்கிராப்டுக்கு 9 மாதங்களும் தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில் பேன்கிராப்ட் மீதான தடை ஏற்கெனவே நீங்கி விட்டது. தொடர்ந்து டி20 லீக் ஆட்டங்களில் ஆட மூவருக்கும் கிரிக்கெட் ஆஸ்திரேலியா அனுமதி அளித்தது. மேலும் ஸ்மித், வார்னர் இருவரும் முழங்கையில் காயம்பட்டதால் ஆடாமல் இருந்தனர்.
இருவரது தடைக்காலமும் மார்ச் 28 உடன் நிறைவடைகிறது. எனினும் மார்ச் 23 முதல் ஆரம்பிக்கவுள்ள ஐபிஎல் போட்டியில் இருவரும் கலந்துகொள்வார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஒருவருட இடைக்காலத் தடை என்பது சர்வதேசப் போட்டிகளுக்கு மட்டும்தான். கடந்த வருடம் இருவருக்கும் ஐபிஎல் போட்டியில் பங்கேற்கத் தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில் இருவரும் - ஸ்மித் ராஜஸ்தானுக்காகவும் வார்னர் ஹைதராபாத்துக்காகவும் இந்த வருட ஐபிஎல் போட்டியில் களமிறங்கவுள்ளார்கள்.