பிரான்ஸ் தலைநகர் பாரீஸ் ஒலிம்பிக்ஸில் ஒற்றைக் கையுடன் விளையாடி பார்வையாளர்களை அசரவைத்துள்ளார் பிரான்ஸைச் சேர்ந்த டேபிள் டென்னிஸ் வீராங்கனை ஒருவர்.
முதன்முதலாக பிரேசிலின் கைகளை இழந்த டேபிள் டென்னிஸ் நட்சத்திரமான புருனா அலெக்ஸாண்ட்ரே, பாரீஸ் ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்றதன் மூலம் அவரின் பாராலிம்பிக் கனவு நனவாகப் போகிறது.
29 வயதான புருனா அலெக்ஸாண்ட்ரே, த்ரோம்போசிஸ் என்றழைக்கப்படும் ரத்தம் உறைதல் நோயால் பாதிக்கப்பட்டு மூன்று மாதக் குழந்தையாக இருக்கும் போது அவரது வலது கை துண்டிக்கப்பட்டது.
ஒலிம்பிக்கில் பங்கேற்ற பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த முதல் பாரா-தடகள வீராங்கனை என்ற பெருமையையும் பெற்றுள்ளார் புருனா அலெக்ஸாண்ட்ரே.
இதுகுறித்து அலெக்ஸாண்ட்ரே கூறுகையில், “நான் பல ஆண்டுகளாக ஒலிம்பிக்கிற்கு தகுதிபெற முயற்சித்து வருகிறேன். பிரேசிலில் போட்டி மிகவும் கடுமையாக இருப்பதால் அது கடினமாக இருக்கும் என்று எனக்கு நன்கு தெரியும்.
ஆனால், நான் அதில் வெற்றியும் பெற்றேன். அதனால், நான் இங்கு வந்து இருக்கிறேன். இன்று என்னுடைய மிகப்பெரிய கனவு நனவாகி இருக்கிறது” என்று கூறினார்.
அலெக்ஸாண்ட்ரே தன்னுடைய 7 வயதில் டேபிள் டென்னிஸ் விளையாட ஆரம்பித்தார்.
ஆரம்பத்தில், ஒரு கையால் விளையாடுவது அவருக்கு கடினமாக இருந்துள்ளது. ஆனால், அவர் இடது கையால் பந்தை மேலே தூக்கி அடித்து பந்தை சுழல வைத்து திருப்பி அடிக்கும் திறமையைக் கற்றுத் தேர்ச்சி பெற்றார். சுமார் ஒரு வருடத்திற்குப் பிறகு என்னுடைய திறமைகளை மாற்றியமைக்க முடிந்தது. தற்போது சர்வீஸ் எனது வலிமைகளில் ஒன்றாக இருக்கிறது என்று திறமையான ஸ்கேட்போர்ட் மற்றும் சைக்கிளிங்கிலும் திறமைபெற்ற அலெக்ஸாண்ட்ரே கூறினார்.
அலெக்ஸாண்ட்ரே ஏற்கனவே பதக்கங்களை வென்ற பாராலிம்பியன் ஆவார். இவர் 2020 டோக்கியோ பாரா ஒலிம்பிக்கில் போட்டிகளில் வெள்ளிப் பதக்கத்தை வென்று அசத்தினார்.
அவர் பிரான்ஸில் நடைபெற்றுவரும் ஒலிம்பிக் போட்டியில் முதல்முறையாக திங்கள்கிழமை களமிறங்கினார். முதல் போட்டியில் சக்திவாய்ந்த தென்கொரிய வீராங்கனைகளை எதிர்கொண்டார். மூன்றாம் தரவரிசையில் உள்ள தென் கொரியாவைச் சேர்ந்த வீராங்கனைகள் பிரேசிலின் சவாலை முறியடித்தனர்.
தோல்விக்குப் பிறகு கூறும்போது, “தோல்விக்குப் பின்னர் உங்களுக்கு ஒரு கை அல்லது ஒரு கால் இருக்கிறதா? என்பதைப் பொருள்படுத்தாமல் எல்லாம் சாத்தியம் என்பதைக் காட்ட வேண்டும்” என்றும் கூறினார்.
உற்சாகமான வரவேற்புக்கு பிரான்ஸ் மக்களுக்கு நன்றி கூறிய அவர், “இன்று கனவு நனவாகி இருப்பதை நான் கொண்டாடுகிறேன். இன்னும் பல நாள்களுக்கு கொண்டாடுவேன்” என்றார்.
தன்னம்பிக்கை மற்றும் விடாமுயற்சி
ஒலிம்பிக்கில் டேபிள் டென்னிஸ் போட்டியில் பங்கேற்ற ஒரே பாராலிம்பிக் வீராங்கனை அலெக்ஸாண்ட்ரே மட்டுமல்ல. வலது கை செயலிழந்த ஆஸ்திரேலியா நாட்டைச் சேர்ந்த மெலிசா தாப்பர் என்ற வீராங்கனை தன்னுடைய மூன்றாவது ஒலிம்பிக்கில் பங்கேற்று அசத்திவருகிறார்.
இதேபோல, இதற்கு முன்னதாக போலந்து வீராங்கனை நடாலியா பார்ட்டிகா, பெய்ஜிங் (2008), லண்டன் (2012) இல் நடந்த ஒலிம்பிக் மற்றும் பாரா ஒலிம்பிக்ஸ் போட்டிகளிலும் விளையாடி பார்வையாளர்களை அசரவைத்தார்.
நடாலியா பார்ட்டிகா எனக்கு மட்டுமல்ல, மெலிசா தாப்பருக்கும், எங்களைப் போன்றோருக்கும் ஊக்கமளித்துள்ளார் என்றும் பார்ட்டிகாவின் யூடியூப் விடியோக்கள் தனக்கு உத்வேகம் அளித்ததாகவும் அலெக்ஸாண்ட்ரே கூறினார்.
மேலும், “தன் நாட்டிலிருந்தும், உலகெங்கிலும் உள்ள மாற்றுத்திறனாளிகளின் பிரதிநிதியாக தன்னைப் பார்க்கிறார்கள். தன்னைப் போன்று இருக்கும் மற்ற வீரர்களுக்கும் இது நல்வாய்ப்பாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன். நமது நாட்டிலும் இதுபோன்ற விளையாட்டை மேம்படுத்த உதவும். அதைச் செய்வதற்கு விளையாட்டு ஒரு சிறந்த வழியாகும் என்று நான் நினைக்கிறேன்” என்றார்.
அலெக்ஸாண்ட்ரே தனது விருப்பமான ஸ்கேட்போர்டில் செலவழித்த நேரங்கள், டேபிள் டென்னிஸில் சமநிலை உணர்வுக்கு முக்கியமானதாகக் கருதுகிறார்.
அவர் திறமையான விளையாட்டு வீரர்களுக்கு எதிராகவே போட்டியிட்டார். மேலும், அவர் தன்னை ஒரு குறைபாடுடையவராக கருதவில்லை என்றும் கூறியுள்ளார்.
“பிரேசில் மக்கள் பாராலிம்பிக்ஸ் மற்றும் ஒலிம்பிக் இரண்டையும் ஒப்பிட்டுப் பார்க்கும் நிலையில் இருக்கிறார்கள். ஒலிம்பிக்கில் வித்தியாசமான உணர்வைக் கொண்டுள்ளது. விளையாட்டு வீரர்கள் போட்டிகளில் சிந்திக்கும் விதம் வித்தியாசமானது. உங்கள் கனவுகளை ஒருபோதும் கைவிடாதீர்கள்” என்றும் அலெக்ஸாண்ட்ரே கூறினார்.
அவரது ஒலிம்பிக் கனவு தற்போது பாரீஸில் முடிந்துவிட்ட நிலையில், ஆகஸ்ட் 28 முதல் செப்டம்பர் 8 வரை நடைபெறும் பாராலிம்பிக் போட்டிகளில் அவர் தனது கவனத்தைத் திருப்பலாம்.
தனது ஒலிம்பிக் அனுபவத்தால் உற்சாகமடைந்த அவர், பாராலிம்பிக்கில் தனிநபர் தங்கம் வெல்வார் என்று நம்புகிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.