செய்திகள்

ரூ.20 லட்சத்துக்கு வாங்கப்படுவேன் என நினைத்தேன்: வருண்

DIN



ரூ.20 லட்சத்துக்கு மட்டுமே வாங்கப்படுவேன் என நினைத்திருந்தேன் என தமிழக வீரர் வருண் சக்ரவர்த்தி தெரிவித்தார்.
தமிழ்நாடு ப்ரீமியர் லீக் போட்டியில் சிறப்பாக பந்துவீசி, தனது மதுரை அணியை முதன்முறையாக சாம்பியன் பட்டம் பெற வைத்தார் வருண் சக்ரவர்த்தி. மேலும் தமிழக அணியில் இடம் பெற்று விஜய் ஹஸாரே போட்டியிலும் சிறப்பாக ஆடி அனைவரது கவனத்தையும் கவர்ந்திருந்தார்.
கட்டட வடிவமைப்பாளராக இருந்து கிரிக்கெட் வீரராக மாறிய வருண் சக்ரவர்த்திக்கு ஐபிஎல் ஏலத்தில் அடிப்படை தொகையாக ரூ.20 லட்சம் நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் 42 மடங்கு கூடுதலாக ரூ.8.4 கோடிக்கு பஞ்சாப் அணி அவரை வாங்கியுள்ளது. தற்போது நிலாவின் மேல் உள்ளது போல் உணர்கிறேன். இத்தகைய பெரிய தொகைக்கு நான் வாங்கப்படுவேன் என சிறிதும் எதிர்பார்க்கவில்லை.
விஜய் ஹஸாரே போட்டியில் 22 விக்கெட்டுகளை வீழ்த்தியது எனக்கு திருப்புமுனையாக அமைந்தது எனத் தெரிவித்தார் வருண்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸ்ரீ செல்லியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

ஸ்ரீ கஜேந்திர வரதராஜப் பெருமாள் கோயில் வைகாசி பிரம்மோற்சவம்

மீன்கள் விலை உயா்வு: விற்பனையும் அமோகம்

கெளரவிப்பு...

நாட்டறம்பள்ளி வரதராஜப் பெருமாள் கோயில் கும்பாபிஷேம்

SCROLL FOR NEXT