செய்திகள்

இந்தியா ஏ அணி அபார வெற்றி

DIN

லீட்ஸ் மைதானத்தில் இங்கிலாந்து கிரிக்கெட் வாரிய லெவன் அணியுடன் திங்கள்கிழமை நடந்த ஆட்டத்தில் 125 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய ஏ அணி வென்றது.
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து வரும் இந்திய ஏ அணி 50 ஓவர் முத்தரப்பு போட்டியில் விளையாட உள்ளது. அதன் ஒரு பகுதியாக இசிபி அணியுடன் லீட்ஸில் நடந்த ஆட்டத்தில் 50 ஓவர்களில் 8 விக்கெட்டை இழந்து 328 ரன்களை இந்திய ஏ அணி எடுத்தது. பிரித்வி ஷா 70, ஷ்ரேயஸ் ஐயர் 54, கிஷன் 50 ஆகியோர் அபாரமாக ஆடினர்.
பின்னர் ஆடிய இசிபி லெவன் அணி 36.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து வெறும் 203 ரன்களை மட்டுமே எடுத்தது. இந்திய அணியின் தீபக் சஹார் 3/48 விக்கெட்டை வீழ்த்தினார். 
இதன் தொடர்ச்சியாக மேற்கிந்திய தீவுகள் ஏ அணி, இங்கிலாந்து லயன்ஸ் அணிகளுடன் டெஸ்ட் ஆட்டங்களிலும் இந்திய ஏ அணி பங்கேற்கிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோவாக்ஸின் பாதுகாப்பானது: பாரத் பயோடெக் விளக்கம்

பிரிஜ் பூஷண் சிங்குக்குப் பதிலாக அவரது மகன்: பாஜக முடிவு ஏன்?

இது எதுங்க அட்டைப் படம்? சோனல் சௌகான்...

பார்வை ஒன்று போதுமே... விமலா ராமன்!

மீண்டும் துபையில் கனமழை: விமான சேவை பாதிப்பு!

SCROLL FOR NEXT