செய்திகள்

இங்கிலாந்தை 219 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது இலங்கை

DIN


இங்கிலாந்துக்கு எதிரான 5-ஆவது மற்றும் கடைசி ஒரு நாள் ஆட்டத்தில் இலங்கை அணி 219 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. முதலில் ஆடிய இலங்கை 366/6 ரன்களை எடுத்தது. பின்னர் ஆடிய இங்கிலாந்து 9 விக்கெட் இழப்புக்கு 132 ரன்களை எடுத்திருந்த போது மழை குறுக்கிட்டது. இதையடுத்து டக்வொர்த்லெவிஸ் முறையின்படி 219 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை வென்றதாக அறிவிக்கப்பட்டது.
முதலில் ஆடிய இலங்கை அணி 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 366 ரன்களை குவித்தது. துவக்க வீரர் நிரோஷன் டிக்வெல்லா 95, சதிரா சமரவிக்ரமா 54, கேப்டன் சண்டிமால் 80, குசால் மென்டிஸ் 56 ரன்களை எடுத்தனர். இங்கிலாந்து தரப்பில் டாம் கர்ரன் 2-71, மொயின் அலி 2-57 விக்கெட்டை வீழ்த்தினர். 
இங்கிலாந்து சரிவு: ஜேசன் ராய் 4, அலெக்ஸ் ஹேல்ஸ் 4, ஜோ ரூட் 10, ஜோஸ் பட்லர் 0 என வரிசையாக ஆட்டமிழந்தனர். பின்னர் பென் ஸ்டோக்ஸ், மொயின் அலி இணை நிதானமாக ஆடி ரன்களை சேர்த்தது. 37 ரன்களுடன் மொயின் அலி ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து சாம் கர்ரன் 2 ரன்களுக்கு வெளியேறினார்.
பென்ஸ்டோக்ஸ் 67 ரன்களிலும், அடில் ரஷீத் 4 ரன்களிலும், பிளங்கட் 5 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். 26.1 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 132 ரன்கûளை இங்கிலாந்து எடுத்திருந்த போது மழை பெய்தது. அகிலா தனஞ்செயா 4, சமீரா 3, விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தென்பரை ஆவணியப்பன் கோயிலில் குதிரை எடுப்பு திருவிழா

‘பாதுகாப்புத்துறை பணியிடங்களில் சேரும் தகுதியை மாணவா்கள் வளா்த்துக் கொள்ள வேண்டும்’

துறைமுகத்திலிருந்து நிலக்கரி ஏற்றிச் செல்லும் லாரிகளுக்கு கட்டுப்பாடு

திருநள்ளாற்றில் மாரியம்மன் வீதியுலா

காரைக்கால் அரசு மருத்துவமனையில் நாளை சிறப்பு மருத்துவ முகாம்

SCROLL FOR NEXT