செய்திகள்

உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப்: அரையிறுதியில் இந்தியாவின் சாய் பிரணீத் தோல்வி!

எழில்

உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி ஆடவர் ஒற்றையர் பிரிவு அரையிறுதிச்சுற்றில் இந்தியாவின் சாய் பிரணீத் தோல்வியடைந்துள்ளார். 

ஸ்விட்சர்லாந்தின் பேஸல் நகரில் நடைபெற்று வரும் இப்போட்டியின் அரையிறுதிச் சுற்று ஆட்டம் இன்று நடைபெற்றது. உலகின் நெ.1 வீரரான கென்டோ மொமோடாவை எதிர்கொண்டார் சாய் பிரணீத். இந்திய ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்த இந்த ஆட்டத்தில் 21-13, 21-8 என சாய் பிரணீத்தை வெற்றி கண்டார் கென்டோ மொமோடா. 41 நிமிடங்களில் இந்த ஆட்டம் முடிவடைந்தது. 

கடந்த 1983-ல் உலகக்கோப்பை போட்டியில் பிரகாஷ் பதுகோன் அரையிறுதிக்குத் தகுதி பெற்றிருந்தார். அதன்பின் 36 ஆண்டுகள் கழித்து அரையிறுதிக்குத் தகுதி பெற்று பதக்கம் வென்றுள்ளார் சாய் பிரணீத்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

”தாலி அணியாத பிரியங்கா காந்தி..” -ம.பி. முதல்வர் விமர்சனம்

நிதி ஒதுக்கீட்டில் தமிழகத்துக்கு மத்திய அரசு துரோகம்: வைகோ குற்றச்சாட்டு

குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்

இந்தியன் - 2 இசைவெளியீட்டு விழா எப்போது?

4-வது இடத்தில் சிறப்பாக செயல்படும் ஜடேஜா: சிஎஸ்கே பேட்டிங் பயிற்சியாளர்

SCROLL FOR NEXT