உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப்: அரையிறுதியில் இந்தியாவின் சாய் பிரணீத் தோல்வி!
உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி ஆடவர் ஒற்றையர் பிரிவு அரையிறுதிச்சுற்றில் இந்தியாவின் சாய் பிரணீத் தோல்வியடைந்துள்ளார்.
உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி ஆடவர் ஒற்றையர் பிரிவு அரையிறுதிச்சுற்றில் இந்தியாவின் சாய் பிரணீத் தோல்வியடைந்துள்ளார்.
ஸ்விட்சர்லாந்தின் பேஸல் நகரில் நடைபெற்று வரும் இப்போட்டியின் அரையிறுதிச் சுற்று ஆட்டம் இன்று நடைபெற்றது. உலகின் நெ.1 வீரரான கென்டோ மொமோடாவை எதிர்கொண்டார் சாய் பிரணீத். இந்திய ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்த இந்த ஆட்டத்தில் 21-13, 21-8 என சாய் பிரணீத்தை வெற்றி கண்டார் கென்டோ மொமோடா. 41 நிமிடங்களில் இந்த ஆட்டம் முடிவடைந்தது.
கடந்த 1983-ல் உலகக்கோப்பை போட்டியில் பிரகாஷ் பதுகோன் அரையிறுதிக்குத் தகுதி பெற்றிருந்தார். அதன்பின் 36 ஆண்டுகள் கழித்து அரையிறுதிக்குத் தகுதி பெற்று பதக்கம் வென்றுள்ளார் சாய் பிரணீத்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.