செய்திகள்

இரு வங்காள கிரிக்கெட் வீரர்களுக்கு கரோனா

DIN

வங்காள வேகப்பந்து வீச்சாளர் முகேஷ் குமார், இடது கை சுழற்பந்து வீச்சாளர் ஷ்ரேயன் சக்ரவர்த்தி ஆகிய இருவரும் கரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

கிரிக்கெட் முகாமை நடத்துவதற்காக 21 மூத்த வங்காள வீரர்கள், 16 மகளிர் வீராங்கனைகள் உள்பட 63 பேருக்கு கரோனா பரிசோதனை நடத்தியுள்ளது வங்காள கிரிக்கெட் சங்கம். இதில் முகேஷ் குமார், ஷ்ரேயன் ஆகிய இருவருக்கும் கரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் கிரிக்கெட் முகாம் நடைபெறுகிறது. இதில் பங்கேற்கும் கிரிக்கெட் வீரர்கள், பயிற்சியாளர்கள், ஊழியர்கள், பாதுகாவலர்கள் என அனைவருக்கும் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. கரோனா பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றி பயிற்சிகளை மேற்கொள்ளவிருப்பதாக வங்காள கிரிக்கெட் சங்கம் கூறியுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அடுத்த 2 மணி நேரத்துக்கு 9 மாவட்டங்களில் மழை!

சக்தி வாய்ந்த நாடாக இந்தியா வளர்ந்து வருவதை பாகிஸ்தான் தலைவர்கள் ஒப்புக் கொள்கிறார்கள்: ராஜ்நாத் சிங்

குலசேகரன்பட்டினத்தில் விண்வெளி பூங்கா: டிட்கோ அதிகாரபூர்வ அறிவிப்பு

மகாராஷ்டிரத்தில் இன்று பாஜக பொதுக்கூட்டம்: பிரதமர் மோடி பங்கேற்பு

ஓடிடியில் ஹாட் ஸ்பாட்!

SCROLL FOR NEXT