முகப்பு
செய்திகள்

அறிமுக வீரருக்கு 6 விக்கெட்டுகள்: முதல் இன்னிங்ஸில் 364 ரன்கள் எடுத்த ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலிய அணி மீதமுள்ள 5 விக்கெட்டுகளை 35 ரன்களுக்கு இழந்தது.

Updated On : 9 ஜூலை 2022, 12:39 pm IST
பிரபாத் ஜெயசூர்யா
பகிர்:

இலங்கைக்கு எதிரான 2-வது டெஸ்டில் முதல் இன்னிங்ஸில் 364 ரன்களுக்கு ஆஸ்திரேலிய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்துள்ளது.

கேலேவில் நடைபெறும் 2-வது டெஸ்டில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி முதல் நாள் முடிவில் 90 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 298 ரன்கள் எடுத்து வலுவான நிலையில் இருந்தது. ஸ்மித் 109, கேரி 16 ரன்களுடன் களத்தில் இருந்தார்கள், மார்னஸ் லபுஷேன் 104 ரன்கள் எடுத்தார்.

இந்நிலையில் ஆஸ்திரேலிய அணி மீதமுள்ள 5 விக்கெட்டுகளை 35 ரன்களுக்கு இழந்தது. ஸ்மித் 145 ரன்களுடன் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். கடைசி 6 பேட்டர்களில் ஒருவரைத் தவிர மீதமுள்ள பேட்டர்கள் ஒற்றை இலக்க ரன்களுக்கு ஆட்டமிழந்தார்கள். டெஸ்டில் அறிமுகமான 30 வயது இடக்கை சுழற்பந்து வீச்சாளர் பிரபாத் ஜெயசூர்யா 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments