ஆசிய விளையாட்டு: அரையிறுதிக்கு முன்னேறிய இந்திய டென்னிஸ் ஜோடி!
டென்னிஸ் இரட்டையர் பிரிவில் இந்தியாவுக்கு வெள்ளிப்பதக்கம் உறுதியாகியுள்ளது.
ஆசிய விளையாட்டுப் போட்டியில் டென்னிஸ் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ராம்குமார் - சகேத் இணை அரையிறுதிக்கு முன்னேறியது.
சீனாவில் செப். 23 ஆம் தேதி தொடங்கிய ஆசிய விளையாட்டுப் போட்டிகள் அக். 8-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
இதில், இன்று (செப். 27) நடைபெற்ற டென்னிஸ் இரட்டையர் பிரிவு காலிறுதி ஆட்டத்தில் இந்தியாவின் ராம்குமார் ராமநாதன் - சகேத் மைனேனி இணை சீனாவைச் சேர்ந்த யீபிங் வூ - ஸின் ஸென்ஜாங் இணையுடன் மோதியது.
Advertisement
Advertisement
விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில், இந்திய இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இறுதியில் 6-1, 7-6 என்ற செட் கணக்கில் இந்திய ஜோடி வெற்றி பெற்றது. இதன்மூலம் அரையிறுதிக்கு இந்திய இணை முன்னேறியுள்ளது. இதனால் டென்னிஸ் இரட்டையர் பிரிவில் இந்தியாவுக்கு வெள்ளிப்பதக்கம் உறுதியாகியுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.