முகப்பு
செய்திகள்

ஆசிய விளையாட்டு: அரையிறுதிக்கு முன்னேறிய இந்திய டென்னிஸ் ஜோடி!

டென்னிஸ் இரட்டையர் பிரிவில் இந்தியாவுக்கு வெள்ளிப்பதக்கம் உறுதியாகியுள்ளது. 

Updated On : 27 செப்டம்பர் 2023, 8:32 pm IST
பகிர்:

ஆசிய விளையாட்டுப் போட்டியில் டென்னிஸ் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ராம்குமார் - சகேத் இணை அரையிறுதிக்கு முன்னேறியது. 

சீனாவில் செப். 23 ஆம் தேதி தொடங்கிய ஆசிய விளையாட்டுப் போட்டிகள் அக். 8-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

இதில், இன்று (செப். 27) நடைபெற்ற டென்னிஸ் இரட்டையர் பிரிவு காலிறுதி ஆட்டத்தில் இந்தியாவின் ராம்குமார் ராமநாதன் - சகேத் மைனேனி இணை சீனாவைச் சேர்ந்த யீபிங் வூ - ஸின் ஸென்ஜாங் இணையுடன் மோதியது. 

Advertisement

Advertisement

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில், இந்திய இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இறுதியில் 6-1, 7-6 என்ற செட் கணக்கில் இந்திய ஜோடி வெற்றி பெற்றது. இதன்மூலம் அரையிறுதிக்கு இந்திய இணை முன்னேறியுள்ளது. இதனால் டென்னிஸ் இரட்டையர் பிரிவில் இந்தியாவுக்கு வெள்ளிப்பதக்கம் உறுதியாகியுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments