முகப்பு
செய்திகள்

டி20 கிரிக்கெட்டில் தடுமாறுகிறார்: இந்திய அணி வீரர் பற்றி முன்னாள் வீரர் விமர்சனம்

3-வது டி20யில் சஹாலுக்கு வாய்ப்பு  அளிக்க வேண்டும் என இந்திய முன்னாள் வீரர் வாசிம் ஜாஃபர் கூறியுள்ளார்.

Updated On : 1 பிப்ரவரி 2023, 1:00 pm IST
இந்திய அணி
பகிர்:

3-வது டி20யில் சஹாலுக்கு வாய்ப்பு  அளிக்க வேண்டும் என இந்திய முன்னாள் வீரர் வாசிம் ஜாஃபர் கூறியுள்ளார்.

நியூசிலாந்துக்கு எதிரான 2-வது டி20யை 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது பாண்டியா தலைமையிலான இந்திய அணி. முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி, 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 99 ரன்கள் எடுத்தது. பிறகு பேட்டிங் செய்த இந்திய அணி, 19.5 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 101 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. அந்த ஆட்டத்தில் 40 ஓவர்களில் 30 ஓவர்களைச் சுழற்பந்து வீச்சாளர்கள் தான் வீசினார்கள். 

இந்நிலையில் 3-வது டி20 ஆட்டத்தில் விளையாடவுள்ள இந்திய அணி பற்றி முன்னாள் வீரர் வாசிம் ஜாஃபர், க்ரிக்இன்ஃபோவுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

Advertisement

Advertisement

சஹாலை அணியில் தக்கவைப்பது நல்லது, ஏனெனில் நியூசிலாந்து அணி பேட்டர்கள் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு எதிராகத் தடுமாறுவார்கள். இந்திய அணியில் மணிக்கட்டுச் சுழற்பந்து வீச்சாளர் இருந்தால் அவரைப் பயன்படுத்திக் கொள்ளவேண்டும். நான் ஏற்கெனவே கூறியதுபோல டி20 கிரிக்கெட்டில் உம்ரான் மாலிக் தடுமாறுகிறார். இந்த வகை கிரிக்கெட்டுக்குத் தேவையான பலவிதமான பந்துவீச்சு முறைகள் அவரிடம் இல்லை. எனவே சஹாலைத் தேர்வு செய்வதே நல்லது. அதேபோல டி20 கிரிக்கெட்டுக்கு ஷுப்மன் கில்லை விடவும் பிருத்வி ஷா பொருத்தமாக இருப்பார். எனவே மாற்றம் தேவை என விரும்பினால் அவரைத் தேர்வு செய்யலாம் என்று கூறியுள்ளார்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments