முகப்பு
செய்திகள்

இந்தியாவுக்கு இன்னொரு செஸ் கிராண்ட்மாஸ்டரைப் பரிசளித்துள்ள தமிழ்நாடு!

கிராண்ட்மாஸ்டர் ஆன முதல் இந்திய சகோதரர்கள் என்கிற சாதனையைப் படைத்துள்ளார்கள்.

Updated On : 21 பிப்ரவரி 2023, 12:33 pm IST
பகிர்:

இந்தியாவின் 80-வது செஸ் கிராண்ட்மாஸ்டர் என்கிற பெருமையைப் பெற்றுள்ளார் தமிழகத்தைச் சேர்ந்த 25 வயது விக்னேஷ். 

கடந்த மாதம், இந்தியாவின் 79-வது செஸ் கிராண்ட்மாஸ்டர் என்கிற பெருமையை தமிழகத்தைச் சேர்ந்த 16 வயது பிரனேஷ் பெற்ற நிலையில் அடுத்த மாதமே இன்னொரு கிராண்ட்மாஸ்டரை இந்தியாவுக்குப் பரிசளித்துள்ளது தமிழ்நாடு.

ஜெர்மனியில் நடைபெற்ற 24-வது நார்ட்வெஸ்ட் கோப்பை 2023 போட்டியை வென்ற விக்னேஷ், கிராண்ட்மாஸ்டர் ஆவதற்கான தகுதியையும் அடைந்துள்ளார். விக்னேஷின் அண்ணன் விசாக், 2019-ல் இந்தியாவின் 59-வது கிராண்ட்மாஸ்டர் ஆனார். இதன்மூலம் கிராண்ட்மாஸ்டர் ஆன முதல் இந்திய சகோதரர்கள் என்கிற சாதனையைப் படைத்துள்ளார்கள்.

Advertisement

Advertisement

தமிழ்நாட்டின் 29-வது செஸ் கிராண்ட்மாஸ்டர், விக்னேஷ். அதாவது இந்தியாவிலுள்ள 80 செஸ் கிராண்ட்மாஸ்டர்களில் 29 பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள். இதன்மூலம் இந்திய அளவில் கிராண்ட்மாஸ்டர்களின் எண்ணிக்கையில் தமிழகத்தின் பங்களிப்பு மேலும் அதிகமாகியுள்ளது. 

1988-ல் இந்தியாவின் முதல் செஸ் கிராண்ட்மாஸ்டர் ஆனார் தமிழகத்தின் விஸ்வநாதன் ஆனந்த். அவரை முன்னுதாரணமாகக் கொண்டு இன்றுவரை ஏராளமான கிராண்ட்மாஸ்டர்கள் நமக்குக் கிடைத்து வருகிறார்கள். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments