அகமதாபாத்தில் கில்: பாகிஸ்தான் போட்டியில் விளையாடுவாரா?
சென்னையிலிருந்து அகமதாபாத் புறப்பட்டுச் சென்ற ஷுப்மன் கில், பாகிஸ்தானுடனான போட்டியில் விளையாடுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
சென்னையிலிருந்து அகமதாபாத் புறப்பட்டுச் சென்ற ஷுப்மன் கில், பாகிஸ்தானுடனான போட்டியில் விளையாடுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
உலகக் கோப்பை கிரிக்கெட் முதலாவது போட்டியில் பங்கேற்க சென்னை வந்த இந்திய தொடக்க வீரர் கில்லுக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டது. இதனால், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் போட்டியில் விளையாடவில்லை.
தொடர்ந்து, உடல்நிலை சரியில்லாத காரணத்தால் விமான பயணம் மேற்கொள்ள மருத்துவர்கள் அனுமதிக்காததால், தில்லியில் நேற்று நடைபெற்ற ஆப்கானிஸ்தானுக்கு எதிரான இரண்டாவது போட்டியிலும் கில் பங்கேற்கவில்லை. சென்னையிலேயே தங்கி சிகிச்சைப் பெற்று வந்தார்.
Advertisement
Advertisement
இந்த நிலையில், சென்னையில் இருந்த இன்று காலை விமானம் மூலம் அகமதாபாத்துக்கு கில் புறப்பட்டுச் சென்றார்.
இதையும் படிக்க | இந்தியா - பாக். போட்டி: ரஜினி, அமிதாப் பச்சன் பங்கேற்பு; 11,000 போலீசார் பாதுகாப்பு
அகமதாபாத்தில் நாளை மறுநாள் பாகிஸ்தான் அணியுடன் இந்தியா விளையாடவுள்ள நிலையில், கில்லும் அகமதாபாத்துக்கு சென்றுள்ளார்.
இதனால், பாகிஸ்தான் போட்டியில் கில் விளையாடுவாரா என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இருப்பினும், அவரது உடல் சோர்வு காரணமாக குறைந்தது இன்னும் ஒரு போட்டியிலாவது விளையாடாமல் இருப்பார் என்றே பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.