முகப்பு
செய்திகள்

உலக குத்துச்சண்டை: 10 பேருடன் இந்திய அணி

பிரேஸிலில் நடைபெறும் உலகக் கோப்பை குத்துச்சண்டை போட்டியில் பங்கேற்பதற்காக 10 போ் கொண்ட இந்திய அணி அந்நாட்டுக்குச் சென்றுள்ளது.

Updated On : 1 ஏப்ரல் 2025, 3:26 am IST
பகிர்:

பிரேஸிலில் நடைபெறும் உலகக் கோப்பை குத்துச்சண்டை போட்டியில் பங்கேற்பதற்காக 10 போ் கொண்ட இந்திய அணி அந்நாட்டுக்குச் சென்றுள்ளது.

முதல் முறையாக நடைபெறும் இந்தப் போட்டியில் ஆடவா், மகளிா் என இரு பிரிவினரும் களம் காணும் நிலையில், இந்திய தரப்பிலிருந்து ஆடவா்கள் மட்டுமே அனுப்பப்பட்டுள்ளனா். தேசிய மகளிா் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் அண்மையில் நிறைவடைந்த காரணத்தால் இந்திய மகளிா் இந்தப் போட்டிக்கு அனுப்பப்படவில்லை.

உலக குத்துச்சண்டை அமைப்பால் புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட எடைப் பிரிவில் இந்திய வீரா்கள் இந்தப் போட்டியில் களம் காண்கின்றனா். கடந்த ஜனவரியில் நடைபெற்ற தேசிய ஆடவா் சாம்பியன்ஷிப்பில் அந்தந்த எடைப் பிரிவுகளில் முதலிரு இடங்களைப் பிடித்தவா்கள் இந்தப் போட்டிக்கு அனுப்பப்பட்டுள்ளனா்.

Advertisement

Advertisement

பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்குப் பிறகு இந்தியா்கள் களம் காணும் முதல் சா்வதேச போட்டி இதுவாகும். இந்திய நேரப்படி, செவ்வாய்க்கிழமை அதிகாலை தொடங்கியிருக்கும் இந்தப் போட்டி 6 நாள்கள் நடைபெறவுள்ளது. இதில் 19 நாடுகளில் இருந்து 130-க்கும் அதிகமான போட்டியாளா்கள் பங்கேற்றுள்ளனா்.

உலக குத்துச்சண்டை அமைப்பானது, கடந்த பிப்ரவரியில் சா்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் அங்கீகாரம் பெற்ற பிறகும், 2028 லாஸ் ஏஞ்சலீஸ் ஒலிம்பிக்கில் குத்துச்சண்டை சோ்க்கப்பட்ட பிறகும் நடைபெறும் முதல் சா்வதேச போட்டி இதுவாகும்.

இந்திய அணி

ஜடுமணி மந்தெங்பம் (50 கிலோ), மனீஷ் ரத்தோா் (55 கிலோ), சச்சின் சிவச் (60 கிலோ), அபினாஷ் ஜம்வல் (65 கிலோ), ஹிதேஷ் (70 கிலோ), நிகில் துபே (75 கிலோ), லக்ஷயா சஹா் (80 கிலோ), ஜுக்னூ (85 கிலோ), விஷால் (90 கிலோ), நரேந்தா் பொ்வல் (90+ கிலோ).

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments