இந்திய ரசிகர்களுக்காக 1 மணிநேரம் முன்னதாக நடைபெறும் இங்கிலாந்து தொடர்!
இந்திய ரசிகர்களுக்காக 1 மணிநேரம் முன்னதாக நடைபெறும் இங்கிலாந்து தொடரைப் பற்றி...
இந்தியா - இங்கிலாந்து இடையேயான போட்டி தொடர் ஒரு மணி நேரம் முன்னதாக நடைபெறும் என்று இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள இந்திய அணி, 5 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகல் கொண்ட தொடரில் விளையாடவிருக்கிறது. இந்தத் தொடர் வருகிற ஜூலை 1 ஆம் தேதி தொடங்கி 19 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
இந்தத் தொடருக்கான இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இதற்காக ஷ்ரேயாஸ் ஐயர் கேப்டனாகவும், 15 வயதான சூர்யவன்ஷிக்கு முதல்முறையாக இந்திய அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதால், இங்கிலாந்து தொடருக்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
Advertisement
Advertisement
இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதும் மொத்தம் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 3 போட்டிகள் இந்திய நேரப்படி இரவு 11 மணிக்கு (உள்ளூர் நேரப்படி 6.30 மணி) எனத் திட்டமிடப்பட்டிருந்தது.
இந்த நிலையில், இந்திய பார்வையாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் போக்கில், 3 டி20 போட்டிகள் 1 மணிநேரம் முன்னதாக தொடங்கும் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
முதலாவது மற்றும் மூன்றாவது போட்டிகள் இரவு 11 மணியிலிருந்து ஒரு மணிநேரம் குறைத்து இரவு 10 மணிக்கும், இரண்டாவது போட்டி இரவு 8 மணியிலிருந்து 7 மணிக்குத் தொடங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.