கால்பந்து ஜாம்பவான் டேவிட் பெக்காமைச் சந்தித்த சமந்தா, தனுஷ்!
இந்தியா வந்திருக்கும் கால்பந்து ஜாம்பவான் டேவிட் பெக்காம் குறித்து...
இந்தியா வந்திருக்கும் கால்பந்து ஜாம்பவான் டேவிட் பெக்காம் நடிகர் தனஷ், நடிகை சமந்தாவை சந்தித்த காட்சிகள் சமூக வலைதளத்தில் கவனம் ஈர்த்துள்ளன.
மெட்டா ஏஐ நடத்திய மும்பை நிகழ்ச்சியில் சமந்தா உடன் டேவிட் பெக்கம் கலந்துரையாடல் நடத்தினார்.
யுனிசெஃப் நல்லெண்ண தூதராக இருக்கும் டேவிட் பெக்காம் இந்தியாவுக்கு சுற்றுப் பயணம் செய்துள்ளார்.
மான்செஸ்டர் யுனைடெட், இங்கிலாந்தின் முன்னாள் வீரரும் இன்டர் மியாமின் தற்போதைய இணை நிறுவனருமான டேவிட் பெக்காம் இந்தியாவின் யுனிசெஃப் அமைப்பில் உள்ள குழந்தைகளைச் சந்தித்தார்.
இன்னொரு நிகழ்வில் நடிகர் தனுஷையும் பெக்காம் சந்தித்து பேசினார்.
பலரும் இவரிடம் கையெழுத்துகளையும் புகைப்படங்களயும் வாங்கினார்கள். மும்பை நிகழ்வில் டேவிட் பெக்காம் பேசியதாவது:
இதுவரை வந்திராத இந்தியாவுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வந்தபோதே மிகவும் பிரமித்துபோனேன். எனக்குப் பிடிக்கும் எனத் தெரியும். ஆனால், இந்தளவுக்கு மிகவும் பிடிக்கும் எனத் தெரியாது.
இந்திய மக்கள், சூழ்நிலை, கலாசாரம், உணவு எல்லாமே பிடித்திருக்கிறது. இந்தியாவில் இருக்கும் ரசிகர்களைப் போல உலகில் பல இடங்களில் இருப்பதில்லை என்றார்.
சமந்தா சுபம் படத்தை தயாரித்திருந்தார். அடுத்ததாக’ ரக்த் பிரம்மந்த்: தி ப்ளடி கிங்டம்’ தொடரில் நடித்துள்ளார்.
தனுஷின் தேரே இஷ்க் மெயின் படம் நேற்று (நவ.28) திரையரங்குகளில் வெளியானது.