என்னை வெறுப்பவர்களுக்கு... சமந்தா பதில்!
நடிகை சமந்தாவின் பதில் குறித்து...
நடிகை சமந்தா தன்னை வெறுப்பவர்கள் குறித்த கேள்விக்குப் பதிலளித்துள்ளார்.
நடிகை சமந்தா மா இண்டி பங்காரம் என்கிற திரைப்படத்தைத் தயாரித்து நடித்துள்ளார். இப்படம் ஆக்சன் கலந்த குடும்ப உணர்வுகளைப் பேசும் படமாக உருவாகியுள்ளது. இது வருகிற ஜூன் 19 ஆம் தேதி வெளியாகவுள்ளதால் புரமோஷன் பணிகளும் தொடங்கியுள்ளன.
இந்த நிலையில், ரசிகர்களிடம் கேள்விகளைக் கேட்டு பதில் சொல்லும் விதமாக சமந்தா இன்ஸ்டாவில் அழைப்பு விடுத்திருந்தார்.
Advertisement
Advertisement
அதில், பேசும்போது, “மா இண்டி பங்காரம் திட்டமிட்ட தேதியில் வெளியாகும். ஒத்திவைக்கும் எண்ணம் இல்லை. இப்படத்தைக் குடும்பத்துடன் காணும் வகையில் எடுத்திருக்கிறோம். கண்டிப்பாக, உங்களுக்குப் பிடிக்கும்” என்றார். மேலும், ரசிகர் ஒருவர், “உங்களை வெறுப்பவர்களுக்கு நீங்கள் என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?” எனக் கேட்டார்.
அதற்கு சமந்தா, “எந்த வெறுப்பாளர்கள்... என்னை வெறுப்பவர்கள் இருக்கிறார்களா?” எனப் பதிலளித்துள்ளார்.
Actress Samantha has responded to a question about her detractors.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.