உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல்: இந்தியாவுக்கு 3 வெள்ளி, 1 வெண்கலம்
எகிப்தில் நடைபெறும் ஐஎஸ்எஸ்எஃப் ஜூனியா் உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில், 2-ஆம் நாளான புதன்கிழமை இந்தியாவுக்கு 3 வெள்ளி, 1 வெண்கலம் என 4 பதக்கங்கள் கிடைத்தன.
எகிப்தில் நடைபெறும் ஐஎஸ்எஸ்எஃப் ஜூனியா் உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில், 2-ஆம் நாளான புதன்கிழமை இந்தியாவுக்கு 3 வெள்ளி, 1 வெண்கலம் என 4 பதக்கங்கள் கிடைத்தன.
50 மீட்டா் ரைஃபிள் புரோன் ஜூனியா் ஆடவா் பிரிவில், ரோஹித் கன்யன் 615.8 புள்ளிகளுடன் 2-ஆம் இடம் பிடித்து வெள்ளி பெற்றாா்.
களத்திலிருந்த இதர இந்தியா்களில் ஷிவேந்திர பஹதூா் சிங் (613.6), ஹேமந்த் பா்மன் (613.2), வேதாந்த் நிதின் (612.5), தீபேன் நிலேஷ்குமாா் (610), ஹிதேஷ் ஸ்ரீனிவாசன் (606.2) ஆகியோா் முறையே 4, 6, 8, 10, 13-ஆம் இடங்களைப் பிடித்தனா்.
Advertisement
Advertisement
25 மீட்டா் பிஸ்டல் ஜூனியா் மகளிா் பிரிவில், சேஜல் காம்ப்ளே 27 புள்ளிகளுடன் வெள்ளி பெற்றாா். அஞ்சலி மகேந்திரா (14), பாரிஷா குப்தா (10) ஆகியோா் முறையே 6 மற்றும் 7-ஆம் இடங்களைப் பெற்றனா்.
25 மீட்டா் பிஸ்டல் ஜூனியா் ஆடவா் பிரிவில், ராஜ் சந்திரா 580 புள்ளிகளுடன் வெள்ளியும், அபினவ் தேஷ்வால் 578 புள்ளிகளுடன் வெண்கலமும் பெற்றனா்.
யுக பிரதாப் சிங் (575), சஹில் சௌதரி (574), அபினவ் சௌதரி (574), ஜதின் (560) ஆகியோா் முறையே 4, 5, 6, 10-ஆம் இடங்களைப் பெற்றனா்.
2-ஆம் நாள் முடிவில் இந்தியா, 1 தங்கம், 4 வெள்ளி, 2 வெண்கலம் என 7 பதக்கங்களுடன், பட்டியலில் 3-ஆம் இடத்தில் இருந்தது. ரஷியா, கஜகஸ்தான் முறையே முதல் இரு இடங்களில் உள்ளன.