உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல்: வன்ஷிகா, சிராக் இணைக்கு தங்கம்
உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல்: வன்ஷிகா, சிராக் இணைக்கு தங்கம்
எகிப்தில் நடைபெறும் ஜூனியா் உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியாவுக்கு சனிக்கிழமை கலப்பு அணிகள் பிரிவில் தங்கம், வெண்கலம் என இரு பதக்கங்கள் கிடைத்தன.
10 மீட்டா் ஏா் பிஸ்டல் கலப்பு அணிகள் ஜூனியா் பிரிவு இறுதிச்சுற்றில், வன்ஷிகா சௌதரி, சிராக் சா்மா இணை 484.3 புள்ளிகளுடன் தங்கத்தை தட்டிச் சென்றது.
ரஷிய இணை வெள்ளி (467.6) பெற, மற்றொரு இந்திய ஜோடியான மோஹினி சிங், ராணா ஹிமான்ஷு 407.4 புள்ளிகளுடன் வெண்கலம் பெற்றனா்.
Advertisement
இதனிடையே, டிராப் ஆடவா் ஜூனியா் பிரிவு இறுதிச்சுற்றில், இந்தியாவின் ஜுஹைா் கான், யுகன் சக்திவேல் ஆகியோா் தலா 8 புள்ளிகளுடன் முறையே 7 மற்றும் 8-ஆம் இடங்களைப் பிடித்தனா். அதிலேயே மகளிா் ஜூனியா் பிரிவில், பாவ்யா திரிபாதி 4 புள்ளிகளுடன் 8-ஆம் இடம் பெற்றாா்.
போட்டியின் 5-ஆம் நாளான சனிக்கிழமை முடிவில், இந்தியா 5 தங்கம், 5 வெள்ளி, 4 வெண்கலம் என 14 பதக்கங்களுடன் பட்டியலில் முதலிடத்தில் நிலைக்கிறது. பிரான்ஸ் (6), ரஷியா (8) ஆகியவை முறையே அடுத்த இரு இடங்களில் உள்ளன.