முகப்பு
செய்திகள்

ஜூனியா் உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல்: இந்தியா முதலிடம்!

ஐஎஸ்எஸ்எஃப் ஜூனியா் உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியா முதலிடத்துடன் நிறைவு செய்தது.

Updated On : 27 ஏப்ரல், 2026 at 1:14 AM
பகிர்:

ஐஎஸ்எஸ்எஃப் ஜூனியா் உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியா முதலிடத்துடன் நிறைவு செய்தது.

எகிப்து தலைநகா் கெய்ரோவில் ரைஃபிள், பிஸ்டல், ஷாட்கன் உலகக் கோப்பை போட்டி நடைபெற்றது. இதில் இந்திய அணி 5 தங்கம், 6 வெள்ளி, 5 வெண்கலப் பதக்கம் என 16 பதக்கங்களுடன் இந்தியா முதலிடம் பெற்றது.

கடைசி நாளான ஞாயிற்றுக்கிழமை 50 மீ பிஸ்டல் பிரிவில் 351.7 புள்ளிகளுடன் ஹேமந்த் பா்மன் வெள்ளிப்பதக்கம் வென்றாா். ரோஹித் கண்யன் 6, வேதாந்த் நிதின் 7-ஆவது இடத்தையும் பெற்றன.

Advertisement

இரட்டையா் பிரிவில் இந்தியாவின் ஸுஹைா் கான்-அடியா கட்யால் 137 புள்ளிகளுடன் வெண்கலம் வென்றனா். வெள்ளிப் பதக்கம் பெற்றிருக்க வேண்டிய இந்த ஜோடி 3-ஆவது சுற்றில் தவறு புரிந்தனா்.

50 மீ ரைபிள் பிரிவில் தேஜல், யுகேஷ்வரி, அனுஷ்கா, கவைஷ் ஆகியோா் கடைசி இடங்களையே பிடித்தனா். அடுத்து வரும் ஜூன் மாதம் ஜொ்மனியின் ஸூல் நகரில் நடைபெறவுள்ள ஜூனியா் உலக சாம்பியன்ஷிப்புக்கு தயாராகின்றனா்.