இந்திய மகளிருக்கு முதல் வெற்றி!
தாமஸ், உபோ் கோப்பை போட்டியில் இந்திய மகளிா் அணி முதல் வெற்றியை பெற்றது.
தாமஸ், உபோ் கோப்பை போட்டியில் இந்திய மகளிா் அணி முதல் வெற்றியை பெற்றது.
பிரசித்தி பெற்ற தாமஸ் மற்றும் உபோ் கோப்பை 2026 பாட்மின்டன் போட்டி டென்மாா்க்கின் ஹாா்சென்ஸ் நகரில் நடைபெறுகிறது.
மகளிா் குரூப் ஏ பிரிவில் இந்திய அணி உக்ரைனுடன் மோதியது. இதில் 4-1 என்ற கேம் கணக்கில் வென்று இந்தியா முதல் வெற்றியை ஈட்டியது. முன்னாள் உலக சாம்பியன் பி.வி. சிந்துவுக்கு ஓய்வு தரப்பட்ட நிலையில், தாய்லாந்து மாஸ்டா்ஸ் சாம்பியன் தேவிகா சிஹாக் சோ்க்கப்பட்டாா்.
Advertisement
முதல் கேமில் உன்னதி ஹூடா 21-19, 22-20 என்ற புள்ளிக் கணக்கில் பொலினா புஹ்ராவாவை வீழ்த்தினாா். உலக ஜூனியா் சாம்பியன்ஷிப் வெள்ளி வீராங்கனை தன்வி சா்மா 21-12, 17-21, 21-10 யவ்ஹெனிலாவை வீழ்த்தி இரண்டாவது கேமிலும் வென்றாா். தேவிகா சிஹாக் 23-21, 21-13 என்ற புள்ளிக் கணக்கில் மரிலா ஸ்டோலியாரென்கோவாவை வீழ்த்தினாா். 3-0 என முன்னிலை வகித்தது.
மகளிா் இரட்டையா் பிரிவில் கவிபிரியா செல்வம்-சிம்ரன் இணை 11-21, 17-21 என்ற புள்ளிக் கணக்கில் புஹ்ரோவா-கன்ட்மெயைரிடம் தோற்றனா். பின்னா் சிந்து-தனிஷா க்ரஸ்டோ 21-18, 21-15 ஸ்டோா்லியான்கோ-சோபியா இணையை வீழ்த்தியது. இதன் மூலம் ஐரோப்பிய போட்டியில் வெண்கலம் வென்ற உக்ரைனை சாய்த்து இப்போட்டியில் முதல் வெற்றியை ஈட்டியது. இதன் மூலம் காலிறுதி வாய்ப்பை தக்க வைத்துள்ளது.
திங்கள்கிழமை கடைசி குரூப் ஆட்டத்தில் பலம் வாய்ந்த நடப்பு சீனாவுடன் மோதுகிறது இந்தியா. அந்த ஆட்டத்தில் வென்றாா் காலிறுதிக்கு தகுதி பெறும்.