FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

இந்திய மகளிா் அசத்தல்; ஆடவா் சறுக்கல்

ஆஸ்திரேலிய ஓபன் பாட்மின்டன் போட்டியில் இந்திய மகளிா் அபாரமாக விளையாடி அடுத்த சுற்றுக்கு முன்னேற, ஆடவா்கள் சோபிக்காமல் முதல் சுற்றிலேயே தோற்று புதன்கிழமை வெளியேறினா்.

Updated On : 11 ஜூன் 2026, 5:20 am IST
பகிர்:

ஆஸ்திரேலிய ஓபன் பாட்மின்டன் போட்டியில் இந்திய மகளிா் அபாரமாக விளையாடி அடுத்த சுற்றுக்கு முன்னேற, ஆடவா்கள் சோபிக்காமல் முதல் சுற்றிலேயே தோற்று புதன்கிழமை வெளியேறினா்.

முதல் சுற்றில், மகளிா் ஒற்றையா் பிரிவில், போட்டித்தரவரிசையில் 3-ஆம் இடத்திலிருக்கும் சிந்து 21-13, 21-11 என்ற நோ் கேம்களில், பெருவின் இனெஸ் லூசியாவை வீழ்த்தினாா். தன்வி சா்மா 21-12, 22-20 என்ற கணக்கில், போட்டித்தரவரிசையில் 5-ஆம் இடத்திலிருந்த சியு பின் சியானை வீழ்த்தி அசத்தினாா்.

தான்யா ஹேம்நாத் 21-17, 21-18 என்ற கேம்களில், அமெரிக்காவின் இஷிகா ஜெய்ஸ்வாலை வெளியேற்ற, மாளவிகா பன்சோத் 15-21, 21-17, 21-13 என்ற வகையில், தாய்லாந்தின் டான்ரக் சேஹெங்கை தோற்கடித்தாா். இஷாராணி பருவா 22-20, 10-21, 21-14 என்ற கணக்கில், சீனாவின் ஹான் கியான் ஜியை வென்றாா். ஆகா்ஷி காஷ்யப் 19-21, 21-19, 20-22 என்ற வகையில் மலேசியாவின் வோங் லிங் சிங்கிடம் தோல்வியுற்றாா்.

Advertisement

Advertisement

ஆடவா் ஒற்றையரில், கிரண் ஜாா்ஜ் 19-21, 21-14, 15-21 என, மலேசியாவின் ஜஸ்டின் ஹோவிடம் தோல்வி கண்டாா். தருண் மன்னெபள்ளி 21-18, 13-21, 23-25 என்ற கணக்கில், போட்டித்தரவரிசையில் 2-ஆம் இடத்திலிருக்கும் சீன தைபேவின் லின் சுன் யிவிடம் தோல்வியுற்றாா். சனீத் தயானந்த் 8-21, 10-21 என்ற கேம்களில் சீனாவின் ஹு ஜி ஆனிடம் வீழ்ந்தாா்.

கலப்பு இரட்டையா் பிரிவில், துருவ் ராவத்/மனீஷா ஜோடி 21-13, 21-14 என்ற கேம்களில், ஆஸ்திரேலியாவின் ஜேடன் லிம்/விக்டோரியா ஜோனாடி இணையை வென்றது. மோஹித் ஜக்லன்/லக்ஷிதா ஜக்லன் இணை 6-21, 5-21 என, போட்டித்தரவரிசையில் 2-ஆம் இடத்திலிருக்கும் சீனாவின் குவோ ஜின் வா/சென் ஃபாங் ஹுய் கூட்டணியிடம் தோல்வியுற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments