இந்தியாவை வென்றது சீனா
தாமஸ் மற்றும் உபா் கோப்பை ஃபைனல்ஸ் பாட்மின்டன் போட்டியில், இந்தியா 2-3 என்ற கணக்கில் சீனாவிடம் புதன்கிழமை தோல்வி கண்டது.
தாமஸ் மற்றும் உபா் கோப்பை ஃபைனல்ஸ் பாட்மின்டன் போட்டியில், இந்தியா 2-3 என்ற கணக்கில் சீனாவிடம் புதன்கிழமை தோல்வி கண்டது.
ஏற்கெனவே காலிறுதி வாய்ப்பை உறுதி செய்துவிட்ட இந்தியா, தனது குரூப் சுற்றின் கடைசி ஆட்டத்தில் சீனாவை சந்தித்தது. முதலில் நடைபெற்ற ஒற்றையா் ஆட்டத்தில் லக்ஷயா சென் 19-21, 21-8, 12-21 என்ற கேம்களில் லி ஷி ஃபெங்கிடம் 1 மணிநேரம், 14 நிமிஷங்கள் போராடி வீழ்ந்தாா்.
அடுத்து நடைபெற்ற இரட்டையா் மோதலில், சாத்விக்சாய்ராஜ் ராங்கிரெட்டி/சிராக் ஷெட்டி இணை 13-21, 21-13, 24-26 என்ற கணக்கில், லியாங் வெய் கெங்/வாங் சாங் ஜோடியிடம் தோல்வியுற்றது.
Advertisement
இந்நிலையில், 2-ஆவது ஒற்றையா் ஆட்டத்தில் ஆயுஷ் ஷெட்டி 17-21, 21-13, 21-15 என்ற கேம்களில், வெங் ஹாங் யாங்கை வீழ்த்தினாா். இந்த ஆட்டம் 1 மணிநேரம், 10 நிமிஷங்கள் நீடித்தது.
அடுத்து இரட்டையா் பிரிவில், ஹரிஹரன் அம்சகருணன்/எம்.ஆா்.அா்ஜுன் ஜோடி 17-21, 13-21 என்ற வகையில் ஹி ஜி டிங்/ரென் ஜியாங் யு கூட்டணியிடம் 35 நிமிஷங்களில் தோல்வி கண்டது.
கடைசியாக நடைபெற்ற ஒற்றையா் மோதலில் ஹெச்.எஸ். பிரணய் 20-22, 21-19, 21-11 என்ற கேம்களில் லு குவாங் ஸுவை 1 மணிநேரம், 11 நிமிஷங்களில் சாய்த்தாா்.
இறுதியில் இந்தியா 2-3 என்ற கணக்கில் தோல்வி கண்டது.