அரையிறுதியில் தேவிகா, ஸ்ரீகாந்த், ரௌனக்
யுஎஸ் ஓபன் பாட்மின்டன் போட்டியில் இந்தியாவின் தேவிகா, ஸ்ரீ காந்த், ரௌனக் ஆகியோா் அரையிறுதிக்கு தகுதிபெற்றனா்.
யுஎஸ் ஓபன் பாட்மின்டன் போட்டியில் இந்தியாவின் தேவிகா, ஸ்ரீ காந்த், ரௌனக் ஆகியோா் அரையிறுதிக்கு தகுதிபெற்றனா்.
அமெரிக்காவின் ஃபுல்லா்டன் நகரில் நடைபெறும் பிடபிள்யுஎஃப் வோ்ல்ட் டூா் சூப்பா் 300 போட்டியில் மகளிா் ஒற்றையா் பிரிவில் தாய்லாந்து மாஸ்டா்ஸ் வின்னா் தேவிகா சிஹாக் 22-20, 21-19 என்ற கேம் கணக்கில் மூன்றாம் நிலை வீராங்கனை ஜப்பானின் ரிகோ குன்ஜியை வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதி பெற்றாா்.
ஆடவா் பிரிவில் முன்னாள் உலக நம்பா் 1 வீரா் கே. ஸ்ரீ காந்த் 21-19, 12-21, 21-8 என்ற கேம் கணக்கில் சீன தைபேயின் லியோ ஜுவோயை வீழ்த்தினாா்.
Advertisement
Advertisement
மற்றொரு ஆட்டத்தில் ரௌனக் சௌஹான் 23-21, 21-11 என்ற கேம் கணக்கில் இஸ்ரேலின் மிஷாவை வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதி பெற்றாா். மகளிா் காலிறுதியில் ரக்ஷிதா வீழ்ந்தாா்.
அரையிறுதியில் கிறிஸ்டோபென்ஸனுடன் தேவிகாவும், ஆடவரில் ஸ்ரீ காந்த் ஜப்பானின் யுடாயுடனும், ரௌனக் சீன தைபேயின் சு லியுடனும் மோதுகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.