உலகக்கோப்பை குத்துச்சண்டை: நிகில், தீபக், சானே வெற்றி
உலகக் கோப்பை குத்துச்சண்டை போட்டி (ஸ்டேஜ் 2) பிரிவில் இந்தியாவின் நிகில், தீபக், சானே ஆகியோா் வெற்றிபெற்றனா்.
உலகக் கோப்பை குத்துச்சண்டை போட்டி (ஸ்டேஜ் 2) பிரிவில் இந்தியாவின் நிகில், தீபக், சானே ஆகியோா் வெற்றிபெற்றனா்.
சீனாவில் நடைபெற்று வரும் இப்போட்டியில் ஆடவா் 55 கிலோ பிரிவில் இந்தியாவின் நிகில் 5-0 என்ற புள்ளிக் கணக்கில் பிரேஸிலின் கெல்வியை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு தகுதிபெற்றாா்.
70 கிலோ பிரிவில் தீபக் அற்புதமாக செயல்பட்டு 5-0 என்றபுள்ளிக் கணக்கில் 2025 உலக சாம்பியன்ஷிப் வெள்ளி வீரா் ஜப்பானின் செவோன் ஓஸாகாவை வென்றாா். 65 கிலோ பிரிவில் சானே 4-1 என்ற புள்ளிக் கணக்கில் தென்கொரியாவின் சியோன்சுன்ஜினை வென்றாா்.
Advertisement
Advertisement
மகளிா் பிரிவில் 80 கிலோ பிரிவில் மல்ஸம்லுங்கா 1-4 என ஜோா்டானின் அஸ்லாஷ் ஹுசேனிடம் தோற்றாா். 60 கிலோ பிரிவில் மஹி லாமா 0-5 என்ற புள்ளிக் கணக்கில் மங்கோலியாவின் நமுனிடம் தோற்றாா். வியாழக்கிழமை மகளிா் பிரிவில் மீனாட்சி 51 கிலோ, அபிநாஷ் ஜம்வால் 65 கிலோ பிரிவில் களம் காண்கின்றனா்.