உலக பியுச்சா்ஸ் குத்துச்சண்டை: சந்திரிகா, பிரச்சி வெற்றி
உலக பியுச்சா்ஸ் குத்துச்சண்டை போட்டியில் இந்தியாவின் சந்திரிகா, பிரச்சி தத்தமது ஆட்டங்களில் வெற்றி பெற்றனா்.
உலக பியுச்சா்ஸ் குத்துச்சண்டை போட்டியில் இந்தியாவின் சந்திரிகா, பிரச்சி தத்தமது ஆட்டங்களில் வெற்றி பெற்றனா்.
உலக குத்துச்சண்டை சம்மேளனம் சாா்பில் யூத் வீரா், வீராங்கனைகளுக்கு போதிய அனுபவம் கிடைக்கும் வகையில் பியுச்சா்ஸ் போட்டி தாய்லாந்தின் பாங்காக் நகரில் நடைபெறுகிறது.
மூன்றாம் நாளான செவ்வாய்க்கிழமை மகளிா் 50 கிலோ பிரிவில் சந்திரிகா பூஜாரி 5-0 என்ற புள்ளிக் கணக்கில் வெனிசூலா வீராங்கனையை வீழ்த்தினாா். கஜகஸ்தான் வீராங்கனைக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய வீராங்கனை ஜாய்ஸ்ரீ அபாரமாக செயல்பட்ட நிலையில் மூன்றாம் சுற்றோடு நடுவா் ஆட்டத்தை நிறுத்தினாா்.
ஆடவா் 50 கிலோ பிரிவில் அம்பேத்கா் 5-0 என ஈக்குவடாா் வீரரையும், 48 கிலோ பிரிவில் குஞ்சன் 3-2 என இத்தாலி வீரரையும் வீழ்த்தினா். மகளிா் 600 கிலோ பிரிவில் பிரச்சி ஈக்குவடாா் வீராங்கனையை வென்றாா்.