முகப்பு
செய்திகள்

உலக சாம்பியன் செல்ஸியை 2-8 என வீழ்த்திய பிஎஸ்ஜி..! பாதியிலேயே வெளியேறிய ரசிகர்கள்!

சாம்பியன்ஸ் லீக்கில் செல்ஸி அணியை வீழ்த்தி, காலிறுதிக்கு முன்னேறிய பிஎஸ்ஜி அணி குறித்து...

Updated On : 18 மார்ச் 2026, 4:09 pm IST
பந்தினை தன்வசப்படுத்தும் முயற்சியில் செல்ஸி மற்றும் பிஎஸ்ஜி அணியினர். - படம்: ஏபி
பகிர்:

சாம்பியன்ஸ் லீக்கில் செல்ஸி அணியை 2-8 என நடப்பு சாம்பியன் பிஎஸ்ஜி அணி வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது.

இரண்டாம் கட்ட ரவுண்ட் ஆஃப் 16 சுற்றில் செல்ஸி - பிஎஸ்ஜி அணிகள் மோதின. இந்தப் போட்டியில் 0-3 என பிஎஸ்ஜி வென்றது. முதல் கட்ட ரவுண்ட் ஆஃப் 16 சுற்றில் 2-5 என பிஎஸ்ஜி வென்றிருந்தது.

செல்ஸி அணி கடந்தாண்டு நடைபெற்ற கிளப் உலகக் கோப்பையை வென்று அசத்தியது. செல்ஸி அணியினர் மிகுந்த பெருமையுடன் ”உலகின் சாம்பியன்” என போஸ்டர் அடித்து வந்தனர்.

Advertisement

Advertisement

செல்ஸி அணியினரின் பதாகை. - படம்: ஏபி

இந்தப் போட்டியில் பிஎஸ்ஜி அணியினர் 6, 14, 62ஆவது நிமிஷங்களில் கோல் அடித்து அசத்தினர். செல்ஸி அணியின் ரசிகர்கள் பாதி வழியிலேயே திடலை விட்டு வெளியேறிய காட்சிகள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றன.

செல்ஸி அணியின் பயிற்சியாளர், “சாம்பியன்ஸ் லீக்கில் ஒரு நல்ல அணியிடம் நீங்கள் தவறு செய்தால் இப்படித்தான் ஆகும். முதல் கோல் எங்களின் தவறு. பல கோல்களை விடுவதற்கு வாய்ப்புகளே இல்லை” என்றார்.

summary

After a ''Champions of the World'' banner, PSG''s surge sinks Chelsea at Stamford Bridge.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments