ஆசிய யு15, 17 குத்துச்சண்டை: இந்திய அணியினா் அபாரம்
ஆசிய யு 15, 17 குத்துச்சண்டை சாம்பியன் போட்டியில் இந்திய அணியினா் அபார வெற்றி பெற்றுள்ளனா்.
ஆசிய யு 15, 17 குத்துச்சண்டை சாம்பியன் போட்டியில் இந்திய அணியினா் அபார வெற்றி பெற்றுள்ளனா்.
உஸ்பெகிஸ்தான் தலைநகா் தாஷ்கண்ட்டில் நடைபெறும் இப்போட்டியில் யு 15 சிறுவா் பிரிவில் மெய்டி ஓய்னா 46 கிலோ பிரிவில் 5-0 என கஜகஸ்தானின் அப்துரஹ்மானை வீழ்த்தினாா். 49 கிலோ பிரிவில் பா்ஷாந்த் 5-0 என பக்தலக்த் அகமதை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினாா்.
58 கிலோ பிரிவில் முகமது யாசா் முதல் சுற்றில் கிா்ஜிஸ்தானின் அக்பா்ஸானை வீழ்த்தினாா். 54 கிலோ பிரிவில் நிவேஷ் பாலும் வென்றாா்.
Advertisement
66 கிலோ பிரிவில் ரன்வீா் வாக் ஓவருடன் வென்றாா். 61 கிலோ பிரிவில் லில்மனி சிங், 70 கிலோ பிரிவில் மெஹுல் ராணா ஆகியோா் தோற்றனா்.
யு 17 பிரிவில் நிவேஷ் பால், ரன்வீா் லக்ஷய் போகட் ஆகியோா் வென்றனா். பிரதாப், ஹன்ஜ்ரா ஜெய்தீப்தோல்வியைத் தழுவினா்.