முகப்பு
செய்திகள்

சாம்பியன்ஸ் லீக்: 20 ஆண்டுகளுக்குப் பிறகு இறுதிப் போட்டிக்கு முன்னேறிய ஆர்செனல்!

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் வென்ற ஆர்செனல் அணி குறித்து...

போட்டிக்குப் பிறகு மகிழ்ச்சியில் ஆர்செனல் வீரர்கள். - படம்: ஏபி
பகிர்:

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் வென்ற ஆர்செனல் அணி 20 ஆண்டுகளுக்குப் பிறகு இறுதிப் போட்டிக்கு முன்னேறி சாதனை படைத்துள்ளது.

லண்டன் எமிரேட் கால்பந்து திடலில் நடைபெற்ற இரண்டாம் கட்ட அரையிறுதிப் போட்டியில் ஆர்செனல் அணி அத்லெடிகோ மாட்ரிட் அணியை1-0 என விழ்த்தியது.

இந்தப் போட்டியில் 44ஆவது நிமிஷத்தில் ஆர்செனல் அணியில் நட்சத்திர வீரர் புகாயோ சகா கோல் அடித்தார். இரண்டாம் பாதியில் அத்லெடிகோ எவ்வளவோ முயன்றும் கோல் அடிக்கவில்லை. முதல்கட்ட ஆட்டத்தில் 1-1 என சமநிலையில் முடிந்திருந்தது.

Advertisement

இதனால், ஒட்டுமொத்தமாக 2-1 என்ற கோல் கணக்கில் ஆர்செனல் அணி அத்லெடிகோ மாட்ரிட்டை வீழ்த்தியது. இந்த சீசனில் எதிலுமே கோப்பை வெல்லாமல் அத்லெடிகோ வெளியேறியிருக்கிறது.

ஆர்செனல் அணி 2006 சீசனில் பார்சிலோனாவுடன் இறுதிப் போட்டியில் தோல்வியுற்றிருந்தது. தற்போது, 20 ஆண்டுகளுக்குப் பிறகு ஆர்செனல் சாம்பியன்ஸ் லீக் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.

மற்றுமொரு அரையிறுதிப் போட்டியில் பிஎஸ்ஜி - பெயர்ன் மியூனிக் அணிகள் மோதுகின்றன. இதில் வெல்லும் அணி ஆர்செனல் உடன் இறுதிப் போட்டியில் மோதவிருக்கிறது.

பிரீமியர் லீக்கிலும் ஆர்செனல் அணி கோப்பை வெல்லும் நிலையில் இருப்பதால் இன்னும் சில வாரங்கள் அந்த அணிக்கு மிக முக்கியமான நாள்களாக இருக்கின்றன. அந்த அணியின் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.

summary

Arsenal reaches its first Champions League final in 20 years as Saka's goal seals win over Atletico

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.