மிகப்பெரிய எலும்புக்கூடு
அசாம் மாநிலம் கிராங் மாவட்டத்தைச் சேர்ந்த நாக்ரபட்டி சூரி என்ற கிராமத்தை சேர்ந்தவர்கள் கோயில் திருவிழா ஒன்றுக்கு பாத யாத்திரை மேற்கொண்டனர்.
அசாம் மாநிலம் கிராங் மாவட்டத்தைச் சேர்ந்த நாக்ரபட்டி சூரி என்ற கிராமத்தை சேர்ந்தவர்கள் கோயில் திருவிழா ஒன்றுக்கு பாத யாத்திரை மேற்கொண்டனர். ஆற்றங்கரை வழியாக சென்றபோது 6 அடி உயரமுள்ள எலும்புக்கூட்டை கண்டனர். யாத்ரீகர்களுள் ஒருவர் அந்த எலும்புக் கூட்டை தனது வீட்டிற்கு எடுத்துச் சென்றுவிட்டார். இவ்விவரம் வனத்துறையினருக்கு எட்டியதும் பாத யாத்திரை சென்றவர் வீட்டைக் கண்டுபிடித்து எலும்புக் கூட்டை பரிசோதித்தனர். அது பல நூற்றாண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த டைனோசரஸ் எலும்புக்கூடு எனக் கண்டறிந்தனர். எலும்புக்கூடு கிடைத்த இடத்திற்கு அருகிலேயே பிரபலமான வனவிலங்கு சரணாலயம் உள்ளது.