முகப்பு
தமிழ்நாடு

சுற்றுச் சூழலைப் பாதுகாக்க மார்ச் 23-ல் விழிப்புணர்வு நிகழ்ச்சி

சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலியுறுத்தி மார்ச் 23-ம் தேதி "எர்த் ஹவர்' என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Updated On : 12 மார்ச், 2013 at 2:07 AM
பகிர்:
Updated On : 3 ஜனவரி, 2024 at 3:05 PM

சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலியுறுத்தி மார்ச் 23-ம் தேதி "எர்த் ஹவர்' என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

"டபிள்யூ.டபிள்யூ.எஃப். ("வேர்ல்ட் வைல்ட் லைஃப்') இந்தியா' என்ற சமூக நல அமைப்பு ஏற்பாடு செய்துள்ள இந்த நிகழ்ச்சி குறித்து நடிகர் ஜீவா சென்னையில் செய்தியாளர்களிடம திங்கள்கிழமை கூறியது:

சுற்றுச் சூழல் மாற்றத்தினால் உலகம் முழுவதும் தட்பவெப்ப நிலையில் பெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இதனால் மக்களின் ஆரோக்கியம் பாதிக்கப்படும்.

Advertisement

எனவே, சுற்றுச் சூழல் பாதுகாப்பு குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த "எர்த் ஹவர்' என்ற நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன்படி, மார்ச் 23-ம் தேதி இரவு 8.30 முதல் 9.30 மணி வரை மின் விளக்குகள், மின் சாதனங்களைப் பயன்படுத்தாமல் மாற்று எரிசக்தியைப் பயன்படுத்த வேண்டும். இதன் மூலம் சுற்றுச் சூழல் பாதுகாப்புக்கான இந்த முயற்சிக்கு மக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று நடிகர் ஜீவா கேட்டுக் கொண்டார்.

டபிள்யூ.டபிள்யூ.எஃப் இந்தியா அமைப்பின் இந்திய பிரசாரப் பிரிவுத் தலைவர் ஆர்த்தி கோஸ்லா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.