போலீஸ் தடியடி: வழக்குரைஞர்கள் நீதிமன்றப் புறக்கணிப்பு
ஜெய்ப்பூர் மற்றும் சண்டீகர் ஆகிய இடங்களில் வழக்குரைஞர்கள் மீது போலீஸார் நடத்திய தாக்குதல்களைக்
ஜெய்ப்பூர் மற்றும் சண்டீகர் ஆகிய இடங்களில் வழக்குரைஞர்கள் மீது போலீஸார் நடத்திய தாக்குதல்களைக் கண்டித்து சென்னை உயர் நீதிமன்ற வழக்குரைஞர்கள் நீதிமன்ற நடவடிக்கைகளைப் புறக்கணித்து திங்கள்கிழமை (மார்ச் 11) ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
அகில இந்திய பார் கவுன்சில் விடுத்திருந்த நாடு தழுவிய நீதிமன்றப் புறக்கணிப்புப் போராட்ட அழைப்பை ஏற்று சென்னையிலும் வழக்குரைஞர்கள் இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
வழக்குரைஞர்கள் மீதான தாக்குதல்களைக் கண்டிக்கும் வகையில் நீதிமன்ற விசாரணைகளைப் புறக்கணித்த சென்னை உயர் நீதிமன்ற வழக்குரைஞர்கள் காவல் துறையினரைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்
Advertisement
தினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு - புதுச்சேரி பார் கவுன்சில் தலைவர் டி. செல்வம், அகில இந்திய பார் கவுன்சில் உறுப்பினரும், தமிழ்நாடு வழக்குரைஞர்கள் சங்கத் தலைவருமான எஸ். பிரபாகரன், சென்னை உயர் நீதிமன்ற வழக்குரைஞர்கள் சங்கத் தலைவர் ஜி. மோகனகிருஷ்ணன், அதன் நிர்வாகிகள் ஆர். முரளி, எஸ். அறிவழகன், சுதா, அந்த சங்கத்தின் முன்னாள் தலைவர் ஆர்.சி. பால் கனகராஜ், பெண் வழக்குரைஞர்கள் சங்கத் தலைவர் டி. பிரசன்னா உள்ளிட்ட ஏராளமான வழக்குரைஞர்கள் கலந்து கொண்டனர்.
நாடு முழுவதும்... இதே பிரச்னையை முன்வைத்து நாடு முழுவதும் பல்வேறு நீதிமன்றங்களில் வழக்குரைஞர்கள் நீதிமன்றப் புறக்கணிப்புப் போராட்டம் நடத்தினர். தலைநகர் தில்லி உயர் நீதிமன்றத்திலும் இப்போராட்டம் எதிரொலித்தது. இதனால் 2ஜி அலைக்கற்றை வழக்கு, காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி ஊழல் வழக்கு, தில்லி மாணவி பாலியல் பலாத்கார வழக்கு ஆகியவற்றின் விசாரணை பாதிக்கப்பட்டது.