அங்கன்வாடி குழந்தைகளுக்கு வண்ண சீருடைகள்: 5 மாவட்டங்களுக்கு நீட்டிப்பு
அங்கன்வாடி குழந்தைகளுக்கு வண்ணச் சீருடைகள் வழங்கும் திட்டம் மேலும் 5 மாவட்டங்களுக்கு விரிவுபடுத்தப்படும் என தமிழக அரசு
அங்கன்வாடி குழந்தைகளுக்கு வண்ணச் சீருடைகள் வழங்கும் திட்டம் மேலும் 5 மாவட்டங்களுக்கு விரிவுபடுத்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
இது குறித்த பட்ஜெட் அறிவிப்பு: அங்கன்வாடியில் பயிலும் குழந்தைகளுக்கு வண்ணச் சீருடை வழங்கும் திட்டம் 2012-13-ம் ஆண்டில் சென்னை, வேலூர், திருச்சி, திண்டுக்கல், தேனி ஆகிய 5 மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டது. 2013-14-ம் நிதியாண்டில் இந்தத் திட்டம் விழுப்புரம், அரியலூர், பெரம்பலூர், நாகப்பட்டினம், திருநெல்வேலி ஆகிய 5 மாவட்டங்களுக்கு விரிவுபடுத்தப்படும். இதற்காக ரூ. 4.30 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
2013-14-ம் ஆண்டில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டத்துக்காக ரூ. 1,320.52 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
Advertisement