முகப்பு
தமிழ்நாடு

கூட்டுறவு வங்கியில் திருட முயற்சி

நாமக்கல்லில் கூட்டுறவு வங்கியின் பூட்டை உடைத்து நகை, பணத்தை திருடும் முயற்சியில், பூட்டை உடைக்க முடியாமல் போனதால், ரூ.7.50 கோடி நகை, பணம் தப்பின.

Updated On : 12 ஏப்ரல் 2013, 3:04 am IST
பகிர்:

நாமக்கல்லில் கூட்டுறவு வங்கியின் பூட்டை உடைத்து நகை, பணத்தை திருடும் முயற்சியில், பூட்டை உடைக்க முடியாமல் போனதால், ரூ.7.50 கோடி நகை, பணம் தப்பின.

நாமக்கல் - திருச்செங்கோடு சாலையில் உள்ள நல்லிபாளையத்தில் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கமும், அதன் வளாகத்திலேயே நியாய விலைக் கடையும் அமைந்துள்ளன. இந்தக் கடன் சங்கத்தின் பின்புறம் பெரியய்யம்பாளையத்தில் நிலத் தரகர் கந்தசாமி (60), மனைவி கண்ணம்மாள் (50), மகள் நீலாம்பிகை (20) ஆகியோருடன் வசித்து வருகிறார்.

இந்த நிலையில், வெளியில் சென்றிருந்த அவர்கள் வியாழக்கிழமை காலை வீடு திரும்பிய போது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்திருந்ததாம். பீரோவில் இருந்த 7 பவுன் தங்க நகை, ரூ.10 ஆயிரம் திருடப்பட்டது தெரிய வந்தது.

Advertisement

Advertisement

தகவலறிந்து வந்த போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது, மோப்ப நாய் அருகேயுள்ள தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கத்துக்கும், அதன் வளாகத்திலுள்ள நியாய விலைக் கடைக்கும் சென்று திரும்பியது. இதையடுத்து, போலீஸார் அங்கு ஆய்வு மேற்கொண்டனர். மர்ம நபர்கள் நியாய விலைக் கடையின் பூட்டை உடைத்து ரூ.500 திருடியது தெரிய வந்தது. பிறகு, அருகிலிருந்த கூட்டுறவுக் கடன் சங்கத்தின் பூட்டை உடைத்து திருட முயற்சித்துள்ளதும் தெரிய வந்தது. ஆனாலும், பூட்டை உடைக்க முடியாததால் மர்மக் கும்பல் அங்கிருந்து தப்பியோடியுள்ளது. இதனால், கூட்டுறவு கடன் சங்கத்தில் இருந்த ரூ.7.5 கோடி மதிப்பிலான நகைகள், பணம் தப்பியது. போலீஸார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.