ஆற்றில் மூழ்கி சென்னை இளைஞர் சாவு
திருவள்ளூர் அருகே ஆற்றில் குளிக்கச் சென்ற இளைஞர் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தார்.
திருவள்ளூர் அருகே ஆற்றில் குளிக்கச் சென்ற இளைஞர் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தார்.
சென்னை கொருக்குப்பேட்டை அண்ணாநகரைச் சேர்ந்த மனோகர் என்பவரது மகன் சக்திவேல் (22). இவர் ஞாயிற்றுக்கிழமை தனது உறவினர் வீட்டு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக பெரியபாளையம் பவானியம்மன் கோயிலுக்கு சென்றுள்ளார்.
பின்னர் பிற்பகலில் அங்குள்ள ஆற்றில் அவர் குளிக்கச் சென்றார். அப்போது எதிர்பாராதவிதமாக நீரில் மூழ்கி அவர் உயிரிழந்தார். இது குறித்து பெரியபாளையம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Advertisement
Advertisement