முகப்பு
தமிழ்நாடு

லாரி மோதி 2 இளைஞர்கள் சாவு

கும்மிடிப்பூண்டி அருகே லாரி மோதி பைக்கில் சென்ற இரு இளைஞர்கள் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தனர்.

Updated On : 22 ஏப்ரல், 2013 at 4:29 AM
பகிர்:
Updated On : 3 ஜனவரி, 2024 at 3:09 PM

கும்மிடிப்பூண்டி அருகே லாரி மோதி பைக்கில் சென்ற இரு இளைஞர்கள் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தனர்.

கும்மிடிப்பூண்டி அடுத்த கோங்கல் காலனி பகுதியைச் சேர்ந்தவர் ராஜா மகன் மதன்(20). அதே பகுதியைச் சேர்ந்தவர் சாமிநாதன் மகன் சரத்(20). லாரி டிரைவர்களான இருவரும் நண்பர்கள்.

÷இந்நிலையில் மதன், சரத் ஆகியோர் கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூர் பகுதிக்கு சென்று விட்டு பைக்கில் வந்து கொண்டிருந்தனர். மதன் பைக்கை ஓட்டினார். அப்போது ஆந்திர மாநிலத்தில் இருந்து கரி ஏற்றிக் கொண்டு சென்னை நோக்கி வந்த லாரி பைக்கின் பின்னால் மோதியது.

Advertisement

இதில் படுகாயமடைந்த மதன், சரத் ஆகியோர் அதே இடத்தில் உயிரிழந்தனர். இது குறித்து ஆரம்பாக்கம் போலீஸார் வழக்குப்பதிந்து லாரி டிரைவரான ஆந்திர மாநிலம் கரீம்நகர் மாவட்டம் திப்பாபள்ளி பகுதியை சேர்ந்த தர்மையா மகன் கனகராஜை(28) கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.