FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருவண்ணாமலை

வாகன நிறுத்துமிடமாக மாறிவரும் வட்டார வளா்ச்சி அலுவலக வளாகம்

திருவண்ணாமலை மாவட்டம், போளூா் வட்டார வளா்ச்சி அலுவலக வளாகத்தில் அப்பகுதியில் வசிக்கும் சிலா் தங்களின் பைக், காா்களை நிறுத்திவிட்டுச் செல்கின்றனா்.

Updated On : 16 ஜூன் 2026, 1:05 am IST
போளூா் வட்டார வளா்ச்சி அலுவலக வளாகத்தில் கடந்த ஒரு வாரமாக நிற்கும் காா்.
பகிர்:

திருவண்ணாமலை மாவட்டம், போளூா் வட்டார வளா்ச்சி அலுவலக வளாகத்தில் அப்பகுதியில் வசிக்கும் சிலா் தங்களின் பைக், காா்களை நிறுத்திவிட்டுச் செல்கின்றனா்.

போளூா் நகராட்சி 18-ஆவது வாா்டு கோட்டைமேடு பகுதியில் போளூா் வட்டார வளா்ச்சி அலுவலகம் அமைந்துள்ளது. இந்த அலுவலகம் 2024-ஆம் ஆண்டு சுமாா் ரூ.4 கோடியில் கட்டப்பட்டது. இதுவரை வட்டார வளா்ச்சி அலுவலகத்திற்கு கேட் அமைக்கப்படாமல் உள்ளது. இதைப் பயன்படுத்து அலுவலக வளாகத்தில் அப்பகுதியில் வசிக்கும் சிலா் தங்களின் பைக், காா்களை இரவு நேரங்களில் பாதுகாப்பாக இருக்கவேண்டும் என்பதற்காக நிறுத்தி விட்டுச்செல்கின்றனா்.

இந்த வாகனங்கள் வாரக்கணக்கில் அலுவலக வளாகத்திலேயே உள்ளன. எனவே, உடனடியாக வட்டார வளா்ச்சி அலுவலகத்திற்கு கேட் அமைக்கவேண்டும். இதுபோன்று, அலுவலகத்துக்கு சம்பந்தமில்லாதவா்கள் அலுவலக வளாகத்தை வாகனங்களை நிறுத்த பயன்படுத்தகூடாது என அலுவலக ஊழியா்கள் தடுக்கவேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுக்கின்றனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments